districts

img

சிவகங்கை மாவட்டத்தில் 35,723 பேர் பங்கேற்பு

சிவகங்கை, ஜூலை 24-   தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-4-க்கான தேர்வானது ஜூலை 24 அன்று  நடைபெற்றது.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் 159 பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு மையங்கள்  அமைக்கப்பட்டிருந்தன. தேர்விற்கு விண்ணப்பித்தி ருந்த 42,375 தேர்வாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதில் 35,723  (84 சதவீதம் )  தேர்வாளர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 6,652 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக்குழு உறுப்பினர்  ஏ.வி.பாலுச்சாமி  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்  ரெட்டி முன்னிலையில்  பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின்போது காரைக்குடி வட்டாட்சியர்  மாணிக்க வாசகம் உபட பலர் உடனிருந்தனர்.