districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உட்பட 3 பேர் கைது

உதகை, டிச.17- குன்னூர் அருகே இளம்பெண்களை பாலியல் தொழிலில்  ஈடுபடுத்திய பெண் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது  செய்தனர். நீலகிரி மாவட்டம், குன்னூரை அடுத்த பாய்ஸ் கம்பெனி  குரூஸ்பேட் பகுதியில் சில நாட்களாக இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக வெலிங்டன் காவல்  துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல்  ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீசார், வெள்ளி யன்று அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  அப்போது அங்குள்ள வேணி என்பவரின் வீட்டில் இளம் பெண்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் நட மாட்டம் அதிகளவு இருந்தது. இதையடுத்து போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்த போது, அங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில்  நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அதேபகுதியைச் சேர்ந்த வேணி (55), புரோக்கர்களான ஹரிதாஸ் (55) சம்பத்குமார் (48) ஆகி யோர் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி  வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும், காவல் துறையினர் கைது செய்து, குன்னூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிபதி இசக்கி மகேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி வேணியை கோவை மத்திய  சிறையிலும், மற்ற இருவரை குன்னூர் கிளை சிறையிலும் போலீசார் அடைத்தனர். இதனிடையே, 3 இளம்பெண்கள் வங்கியில் கடன் வாங்கி  தருவதாக கூறியதை நம்பி, வேணியின் வீட்டிற்கு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும், 3  இளம்பெண்களை போலீசார் மீட்டு, அவர்களது உறவினர்கள்  வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

உதகையில் அதிநவீன் கேமராக்கள் பயன்பாடு துவக்கம்

உதகை, டிச.17- உதகையில் குற்ற சம்பவங்களை தடுக் கும் வகையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணி சனியன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை, சர்வ தேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் 30  லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதே போல் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வியா பாரிகளும் பொருட்கள் வாங்க மார்க்கெட், சேரிங்கிராஸ் உள்ளிட்ட முக்கிய பகுதி களுக்கு வந்து செல்கின்றனர். இதனால் கடந்த சில வருடங்களாக உதகையில் கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  எனவே, உதகையில் நிலவும் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும், குற்ற சம்ப வங்களை செய்துவிட்டு தப்பிப்போரை கண்காணிக்கவும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப் பட்டது. இதன்படி நீலகிரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், உதகையில் சேரிங்கிராஸ், பேருந்து நிலை யம் உள்ளிட்ட பகுதிகளில் அதிநவீன 17  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு, சனியன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட துணை காவல்  கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கூறுகை யில், நீலகிரி மாவட்டத்தில் மலர் கண்காட்சி  உட்பட பல்வேறு சீசன்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை குறைக் கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பித்து  செல்வோரை அடையாளம் காணவும் 32  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக 17  கண்காணிப்பு கேமராக்கள் சனிக்கிழமை  முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆட்டோ மேட்டிக் முறையில் தானாகவே வாகன பதிவு எண்களை சேமித்து வைக்கும்.  இந்த  தகவல்கள் அனைத்தும் 3  மாதங்களுக்கு பதிவு செய்யப்படும் என்பதால் தேவைப் பட்டால் மீண்டும் எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் நகரில் எங்காவது போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டால் அலுவலகத்தில் இருந்தவாறு சரி செய்ய இந்த முறை உதவும். அதேபோல் போக்குவரத்து விதி மீறல், நகை பறிப்பு, விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பித்து செல்லுதல் உள்ளிட்ட குற்ற  சம்பவங்களை கண்காணித்து, குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முடியும்.  இதேபோல் வருகிற புத்தாண்டுக்குள் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதி களிலும் 64 அதிநவீன கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்படும், என்றார்.

நர்சிங் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

கோவை, டிச.17- பொள்ளாச்சி அருகே 17 வயது நர்சிங் மாணவியை திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டு நரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனை மலையை சேர்ந்த 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள  நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதேபகுதியை சேர்ந்த 20 வயது ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், டிச.12  ஆம் தேதியன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு  செல்வதாகக்கூறி விட்டு சென்றார். ஆனால், அவர் கல்லூ ரிக்கு செல்லவில்லை. அப்போது ஓட்டுநர், மாணவியிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி அவரை வால்பாறைக்கு அழைத்து சென்றார். இதன்பின்  அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து ஓட்டுநர், மாணவியுடன் வால் பாறையில் அறை எடுத்து தங்கினார். அப்போது மாணவியை  அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே மாணவி வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது ஓட்டுநர் தங்களது மகளை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர், வால்பாறைக்கு விரைந்து  சென்று மாணவியுடன் தங்கியிருந்த ஓட்டுநரை கைது செய்து,  மாணவியை மீட்டனர். இதன்பின் போலீசார் 17 வயது மாணவி யை கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்த  ஓட்டுநர் மீது போக்சோ, குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

ஏற்றுமதி சரிவு மாறி வளர்ச்சி ஏற்படுகிறது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை

திருப்பூர், டிச. 17 - கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிட 2022 நவம்பர்  மாத ஏற்றுமதி 22.71 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி குறித்த மத்திய வர்த்தக அமைச் சரக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதன் மூலம் கடந்த செப் டம்பர் மாதம் முதல் நீடித்த ஏற்றுமதி சரிவு விகிதம் மாறி  நம்பிக்கை அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலை வர் கே.எம்.சுப்பிரமணியம் சனிக்கிழமை விடுத்துள்ள செய்தி யறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர்  மாதங்களில் ஏற்றுமதி அளவு முந்தை ஆண்டு இதே மாதங் களுடன் ஒப்பிடும்போது கடும் சரிவைச் சந்தித்தது. ஆகஸ்ட் டில் 14.6 சதவிகிதம், செப்டம்பரில் 24.4 சதவிகிதம், அக்டோ பரில் 34.1 சதவிகிதம் என்ற அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது.  இந்த நிலையில் நவம்பர் மாதம் இந்த வீழ்ச்சியில் மாற்றம் ஏற் பட்டு 10.6 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சி விகிதம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.  ஆஸ்திரேலியாவுடன் ஏற்படுத்தப்பட்டு டிசம்பர் 29ஆம் தேதி  நடைமுறைக்கு வர இருக்கும் வர்த்தக ஒப்பந்தமும், மத்திய  வர்த்தக அமைச்சரகம் தெரிவித்திருப்பது போல, அடுத்த  இரண்டு மாதங்களில் பிரிட்டனுடன் ஏற்படுத்த இருக்கும் வர்த்தக ஒப்பந்தமும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியை அதிகரிக்க மிகப்பெரும் ஊக்க சக்தியாக இருக்கும். வரக் கூடிய நாட்களில் ஏற்றுமதி உயரும் என்று நம்பிக்கை ஏற்பட் டிருப்பதாக கே.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

மின் சிக்கன விழிப்புணர்வு:  கட்டுரை,  ஓவியப்போட்டிக்கு அழைப்பு

தாராபுரம், டிச. 17- மின் சிக்கன வாரத்தையொட்டி மின்சிக்கன விழிப்புணர்வு  கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டியில் பங்கேற்க பொதுமக் கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தாராபுரம் மின்வாரிய  செயற்பொறியாளர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் , பல்ல டம் மின் பகிர்மான வட்டம் பல்லடம் மேற்பார்வை பொறியா ளர் சு.ஜவஹர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது, மின்வாரியம் சார்பில் மின் சிக்கன வாரம் டிசம்பர்  14 முதல் 20 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இந்நிகழ்வில்  பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மின் சிக்க னம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இணைய தளம் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மின் சிக்க னம் குறித்த கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப் படுகிறது.  கட்டுரைப்போட்டிக்கான தலைப்புகள்  மின்னாற்றல் சேமிப்பில் என் பங்கு,  மின்னாற்றல் ஆடம்பரத்திற்கா! அத்தி யாவசியத்திற்கா, மின்னாற்றல் சேமிப்பின் அவசியம் ஆகிய  தலைப்புகளில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி https: //forms.gle/6MDToAAfehTNGLkZ6 இணையதள முகவரி யின் மூலமாக கலந்து கொள்ளலாம். இதேபோல் ஓவியப்போட்டிக்கான தலைப்புகள் மின் னாற்றல் சேமிப்பும் பசுமை உலகமும், நாளைய இருளை  தடுப்போம் இன்றே விழிப்புணர்வு பெறுவோம், இயற்கை  முறை மின்சாரம் காலத்தின் கட்டாயம் ஆகிய தலைப்பு களில் ஓவியம் வரைந்து https://forms.gle/gNJFcY txZaASBXVe8 இணையதள முகவரி மூலமாக கலந்து கொள் ளலாம். இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு மின்  சிக்கன வாரவிழாவான  டிச.20 ஆம் தேதி பரிசுகள் வழங் கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூட்டிய வீட்டில் திருடியவர் கைது

அவிநாசி, டிச.17- பெருமாநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளி ருந்த நகை, ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை திருடிய வரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர். பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் சரவணாபுரம்  பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்(49), பனியன் தொழிலாளி. இவ ரும், இவரது மனைவியும் கடந்த ஜூலை 1ஆம் தேதி வீட்டை  பூட்டி விட்டு, வழக்கம் போல பனியன் நிறுவனத்திற்கு சென் றுள்ளனர். மதியம் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள்,  ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர் திருடிச் சென்றது  தெரியவந்தது. இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமராவில் பதிவான அடை யாளம் தெரியாத  நபரை தேடி வந்தனர். இந்நிலையில், அந்த  நபர் திருப்பூர் தென்னம்பாளையம் பட்டுக்கோட்டையார் நக ரைச் சேர்ந்த வேலாயுதம் மகன் அங்கப்பன்(50) என்பது  கண்டுபிடிக்கபட்டு, வியாழனன்று அவரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

இன்று மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் 1,9,15 ஆவது வார்டு பகுதிகளில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெற்று  வருகிறது. இந்தக் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக இன்று காலை 7:30 மணி அளவில் வெங்கமேடு மல பார் பேக்கரி அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:48.01/60அடி நீர்வரத்து:641கன அடி
வெளியேற்றம்:265கனஅடி
அமராவதி அணை நீர்மட்டம்: 89.18/90அடி.நீர்வரத்து:593கனஅடி வெளியேற்றம்:501கனஅடி

போக்சோ சட்டத்தில் கைது

அவிநாசி, டிச.17-   அவிநாசி அருகே மடத் துப்பாளையம் சாலை பகுதி யைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் மணிகண்டன் (41). இவர், அதேபகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத் துள்ளார். இதுகுறித்து அவி நாசி அனைத்து மகளிர் போலீ சார் போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்து மணி கண்டனை கைது செய்த னர்.

வீடு கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

ஈரோடு, டிச. 17- ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் 20 பேர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு மனு அளித்தனர். மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர் கூட்டம் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலசங்கத்தினரிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில், இலவச வீட்டுமனை கேட்டு 4  பேரும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு 20 பேரும், காது  ஒலி கருவி கேட்டு 10 பேரும், வீல் சேர் கேட்டு 7 பேரும், செயற் கைக்கால் கோரி ஒருவரும் மனு கொடுத்தனர்.  இம்முகாமில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க  மாவட்ட செயலாளர் ஏ.சகாதேவன், நகர தலைவர் ராஜு, செய லாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவ மாணவர்கள் வெள்ளை அங்கி அணியும் விழா

மருத்துவ மாணவர்கள் வெள்ளை அங்கி அணியும் விழா ஈரோடு, டிச.17- பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரியில் வெள்ளை அங்கி அணியும் விழா வெள்ளியன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல் லூரியில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் புதி தாக சேர்ந்துள்ள 100 மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி (கோட்)  அணிவிக்கப்பட்டது. பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட் டது. 20 ஆண்டுகளாக வெள்ளை அங்கி அணி யும் விழா நடைபெறாத நிலையில், முதன் முறையாக வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல் வர் சந்திரபோஸ், மருத்துவக் கண்காணிப் பாளர் சிவராமன், உறைவிட மருத்துவ அலு வலர் ராணி, பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மண் சரிவுகளை தடுக்க மலைப்பாதைகளில் கூண்டு சுவர்கள் அமைக்க கோரிக்கை

மேட்டுப்பாளையம், டிச.17- மேட்டுப்பாளையம் - உதகை மலைப் பாதையில் மழைக்கால மண் சரிவுகளை தடுக்கும் வகையில் கட்டப்பட்ட கூண்டு சுவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மண் சரிவு களை தடுத்து பயனளித்து வருகிறது. கன மழை காலங்களில் மண் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து இதே போல் புதிய கூண்டு சுவர்கள் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு பெய்த தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தி லிருந்து உதகை செல்லும் சாலையில் பல  இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மூன்று மாதங்கள் வரை போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. பெரும் பாறைகள் மேலிருந்து விழுந் ததில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையே புதைந்து போயின. அருவி போல் கொட்டிய நீரின் வேகம் தாங்காமல் தடுப்புச்சுவர்கள் அனைத்தும் உடைந்து அடித்து செல்லப்பட் டன. இதனையடுத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் சாலைகளை மீண்டும் செப்பனிட்டதோடு, நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் ஆங்காங்கே  சாலையோரத்தில் கூண்டு சுவர்களையும் கட்டியது. வலுவான இரும்பு கம்பிகளால் பெரிய கூண்டு போல் கட்டி அதனுள் கருங்கற்களை நேர்த்தியாக அடுக்கி கற்களை இணைக்க சிமென்ட் பூச்சு இல்லாமல் இந்த புதுமை யான சுவர்கள் எழுப்பப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் மேலிருந்து வேகமாக வரும் சகதிகள் கலந்த மழை நீர் தடுக்கப்பட்டு சுவற்றின் கருங்கற்கள் இடையே உள்ள  இடைவெளி வழியே எளிதாக கடந்து சென்ற தோடு மண் சரிவுகளும் தடுக்கப்பட்டது. இத னால் தற்போது வரை ஏற்கனவே பாதிப்பு ஏற் பட்ட இடங்களில் மீண்டும் பெரிய அளவில் மண் சரிவுகள் ஏற்படவில்லை இதனால் பாறைகளும் உருண்டு விழவில்லை. எதிர் பார்த்த பலனை அளித்து வரும் இது போன்ற கூண்டு சுவர்களை மண் சரிவுகள் ஏற்பட வாய்ப் புள்ள இடங்களை உரிய வல்லுநர் குழுக்கள் மூலம் கண்டறிந்து அங்கெல்லாம், இதே போன்ற புதிய சுவர்களை கட்ட வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சாலையின் மழைநீர் வடி கால்கள் பல இடங்களில் கழிவுகளால் அடைத்து கிடக்கின்றன. இவ்வழியே பய ணிக்கும் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பைகள் போன்றவை மழைநீர் வடிந்து செல்வதை முற்றிலுமாக தடுத்து வருகின்றன. இதனால் மழைக்காலங்களில் மலைப்பாதையில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் இதனை சீரமைப்பது அவசியம் என்றும் சமூக ஆர்வ லர்கள் தெரிவித்துள்ளனர்.