மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்மழை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்வு
திருநெல்வேலி, ஜூலை 13- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் புதன்கிழமை 14 மில்லிமீட்டர் மழை பதி வாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை 60.55 அடியாக இருந்த நிலையில், புதன்கிழமை 63.05 அடியாக உயர்ந்தது. அணைக்கு தற்போது வினாடிக்கு 1176 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 806 கனஅடி நீர் வெளி யேற்றப்படுகிறது. சேர்வலாறு அணையில் 77.49 அடி நீர் இருப்பு உள்ளது. 76.11 அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் 1 அடி உயர்ந்துள்ளது.இதேபோல் புறநகர் பகு திகளான அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. களக்காட் டில் அதிகபட்சமாக 1.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அணை பகுதிகளான கடனா, ராம நதி, கருப்பாநதி, குண்டாறு உள்ளிட்ட இடங்களிலும் பரவ லாக மழை பெய்தது. இதனால் அந்த அணைகளின் நீர்மட்டமும் மெல்ல உயர்ந்து வருகிறது. தற்போது நிலவரப்படி கடனா அணையில் 60.50 அடியும், ராமநதியில் 73.25 அடியும் உள்ளது. ராமநதி அணை நிரம்ப இன்னும் 10 அடி நீரே தேவை. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இதமான காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் விவசாயிக்கு பயிர் காப்பீடு
திருநெல்வேலி ,ஜூலை 13- பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றம் மூலம் விவசாயிக்கு பயிர் காப்பீடு தொகை கிடைத்தது. தென்காசி மாவட்டம் வீரசிகாமணி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த கருப்பன் என்பவருடைய மகன் கைலா சம். இவர் கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரத்தில் உள்ள நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு உளுந்து பயிர் சாகுபடி செய்திருந்தேன். பருவமழை சரியாக பெய்யாததால் பயிர் விளைச்சல் இல்லை. அந்த பயிருக்கு காப்பீடு செய்திருந்தேன். ஆனால் அந்த காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகை தரவில்லை. அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறிஇருந்தார். இந்த வழக்கை நீதிபதி சமீனா விசாரணை நடத்தினார். அப்போது தனியார் காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டு தொகையை வேளாண்மைத் துறைக்கு செலுத்தி விட்ட தாகத் தெரிவித்தது. இதையடுத்து வேளாண்மைத் துறை அதிகாரியை அழைத்து விசாரித்தபோது, கைலாசம் வங்கி கணக்கில் காப்பீட்டு தொகையை செலுத்த உத்தரவிடப் பட்டது. அதன்படி ரூ.18,478 கைலாசம் வங்கி கணக்கில் வேளாண்மைத் துறை சார்பில் செலுத்தப்பட்டது. 5 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தால் அவருக்கு காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது.
கல்குவாரிகள் திறப்பு எப்போது? அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி
திருநெல்வேலி, ஜூலை 13- நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுவட்டார பகுதி தொழிற்கல்வி படித்த இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சி.வி.கணேசன் அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நெல்லை மாவட்டத்தில் தற்போது கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை இல்லாமல் பலர் இருக்கின்றனர். மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. குவாரி எப்போது திறக்கப்படும் என அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். அவருடன் இருந்த சபாநாயகர் அப்பாவு, எவ்வளவு நாட்களில் குவாரி திறக்கப்படும் என்பதை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.உடனே மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, இதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. முழுமையான பரிசீலனைக்கு பிறகு குவாரிகள் திறக்கப்படும் என்று கூறினார். அப்போது சபாநாயகர் அருகில் இருந்த அமர்ந்திருந்த நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திடீரென கோபமடைந்தார். அவர் எழுந்து நின்று 60 நாள் ஆகி விட்டது. இன்னும் திறக்கவில்லை என அமைச்சரிடம் ஆவேசமாக கூறினார். உடனே அமைச்சர் சி.வி. கணே சன் அவரை அமருங்கள் என்று கூறினார். ஆனால் மறுபடியும் ஞான திரவியம் எம்.பி. எழுந்து நின்று, இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மீண்டும் கூறி வாக்குவாதம் செய்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை : விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடி, ஜூலை 13 தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற்றிட விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ரூ.1000/- , 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.3000/-, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ.4000/-, இளநிலை கல்விக்கு ரூ.6000/- மற்றும் முதுநிலை கல்விக்கு ரூ.7000/-மும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையோடு கூடுதலாக வாசிப்பாளர் உதவித் தொகை 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ.3000/-, இளநிலை கல்விக்கு ரூ.5000/- மற்றும் முதுநிலைகல்விக்கு ரூ.6000/-மும் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
திருநெல்வேலி, ஜூலை 13- தியாகராஜ நகரில் ரயில்வே மேம்பால பணி களை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு பாதி யிலே உள்ளது, இந்த மேம் பால பணிகள் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியது, ஆனால் ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் மேம்பாலம் அமைக் கப்படவில்லை. ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் தற்போது அடிக்கடி ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சில நேரம் 10 நிமிடங்கள் முதல் 20 நிமி டங்கள் வரை பொதுமக்கள் ரயில்வே கேட்டில் நிற்கும் சூழல் உள்ளது. எனவே சம் பந்தப்பட்ட நிர்வாகம் தலை யிட்டு 80சதவீதம் நிறைவ டைந்த ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் விரும்பு கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் குறையும் கொரோனா பாதிப்பு
திருநெல்வேலி, ஜூலை 13- நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக் கத்திலேயே இருந்தது. இந்நிலையில் தமிழ கத்தில் திடீரென பாதிப்பு அதி கரிக்க தொடங்கிய நிலை யில் நெல்லையிலும் தொற்று எண்ணிக்கை உய ரத் தொடங்கியது. அந்த வகையில் இந்த மாதம் தொ டக்கத்தில் தினசரி பாதிப்பு 50-ஐ நெருங்கியது. தொடர்ந்து தினமும் அதிக ரித்து கடந்த சில நாட்களு க்கு முன்பு அதிகபட்சமாக ஒரு நாள் பாதிப்பு 100-ஐ கடந்தது. இதைத்தொடர்ந்து தொற்று பரவலை தொடக் கத்திலேயே கட்டுப் படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநக ராட்சி சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அதன்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு பணி கள் நடக்கிறது. இதனால் தொற்று பாதிப்பு படிப்படி யாக குறைய தொடங்கி உள்ளது. 10-ஆம் தேதி 90-க்கு அதிகமாக இருந்த பாதிப்பு 68 ஆகவும் செவ் வாய்க்கிழமை 39 ஆகவும் இருந்தது. புதன்கிழமை தொற்று எண்ணிக்கை மேலும் குறைந்து இன் றைய பாதிப்பு 36 ஆக உள்ளது. இதில் அதிகபட்ச மாக மாநகராட்சி பகுதியில் 12 பேருக்கு பாதிப்பு உறுதி யானது. அதேபோல் மாவட் டத்தில் அம்பை, பாளை, சேரன்மகாதேவி, மானூர், ராதாபுரம் உள்ளிட்ட பகுதியி லும் பாதிப்பு கண்டறியப் பட்டது.
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தென்காசி, ஜூலை 13 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வரு வாய் கோட்டாட்சியர் அலுவ லகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. கூட்டத்தில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவ சாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தும் உரிய ஆலோ சனைகளை கூறுமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அரசு ஆணையை மீறி மாணவர் சேர்க்கை மூட்டா உள்ளிருப்புப் போராட்டம்
திருநெல்வேலி, ஜுலை 13- நெல்லையில் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். நெல்லை கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பாக உள்ளிருப்புப் போராட்டம் நடந்தது. பாளையங்கோட் டையில் உள்ள ஒரு கல்லூரி யில் தமிழக அரசு ஆணை யை மீறி மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறி அதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. இதில் மூட்டா ஆசிரியர் சங்க தலைவர் தேவசன், செயலாளர் சிவஞானம், பொருளாளர் கோமதிநாயகம், துணைத் தலைவர்கள் ராஜசேகர், இசக்கியம்மாள், துணைச் செயலாளர்கள் சகாயம் அந்தோணி சேவியர், உமா ஜாஸ்மின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கேரளத்தில் காணாமல்போன வாலிபர் இரயுமன்துறையில் பிணமாக மீட்பு
கொலை என தந்தை புகார்
நாகர்கோவில், ஜுலை 13- குமரி மாவட்டம் இரயு மன்துறை கடல் பகுதியில் புதனன்று (ஜுலை 13) வாலிபர் ஒருவர் பிணமாகக் கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் குளச்சல் கட லோரக் காவல் படையினரு க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நித்திரைவிளை காவல் துறையினர் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப் பற்றி விசாரணை மேற் கொண்டனர். விசாரணை யில் பிணமாகக் கிடந்தவர் கேரளத்தில் விழிஞ்ஞம் பகு தியைச் சேர்ந்த கிரண் (25) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சனியன்று (ஜுலை 9) திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் உள்ள ஆழிமலை கடற்கரையில் தனது காதலியுடன் சென்றுள் ளார். அப்போது அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள் கிரணை துரத்தியுள்ளனர். இந்த காட்சி சிசி டிவியில் பதி வாகி இருந்தது. கிரணின் தந்தை அளித்த புகாரின்பே ரில் விழிஞம் காவல்துறை யினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் துரத்தில் உள்ள இரயுமன்துறை கடலில் கிரணின் சடலம் ஒதுங்கியது. தகவல் அறிந்த தும் விழிஞம் காவல்துறையி னரும் கிரணின் குடும்பத்தி னரும் இரயுமன்துறைக்கு புதனன்று காலை வந்தனர். கிரணின் கையில் கட்டி யிருந்த நூலை வைத்து தனது மகன்தான் என அவ ரது தந்தை தெரிவித்தார். எனினும் டிஎன்ஏ சோதனை யில் உறுதி செய்த பிறகே சடலத்தை விழிஞ்ஞம் காவல் துறையினரிடம் ஒப்படைக்க முடியும் என நித்திரவிளை காவல்துறையினர் தெரி வித்தனர். கிரணின் தந்தை கூறுகையில், தனது மகனை அவன் காதலித்த பெண் ணின் உறவினர்கள் கடத்தி தாக்கி கெலை செய்து கடலில் வீசியுள்ளதாக தெரி வித்தார். இரு மாநில எல்லை யில் நடந்துள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மின்தூக்கி இல்லாத பார்வதிபுரம் பாலத்தில் ஒன்றிய அமைச்சர் பகவத் கிஷன் ஆய்வு
நாகர்கோவில், ஜுலை 13- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேம்பாலத்தை ஒன்றிய அமைச்சர் பகவத் கிஷன் ராவ் கராத் புதனன்று (ஜுலை 13) பார்வையிட்டார். 2014 மக்களவை தேர்தலின்போது பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். வெற்றிபெற்று ஒன்றிய அமைச்சராகவும் பொறுப்பேற்றார். வாகன பெருக்கம் காரணமாக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு காலத்தின் கட்டாயமாக மாறியது. அதன்படி நாற்கர சாலைகளும், ஆறுவழி சாலைகளும் வேக மாக அமைக்கப்பட்டன. ஆனால் கன்னியா குமரி மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் இன்றும் இழுபறி யாகவே உள்ளன. ஆனால், இதுகுறித்து பாஜகவும் ஒன்றிய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ண னும் கவலைப்படவில்லை. மாறாக ரூ.314.02 கோடியில் பார்வதிபுரத்திலும், குழித்துறை யிலும் இரண்டு மேம்பாலங்களை பத்தாண்டு களில் அமைத்தனர். மார்த்தாண்டம்- குழித்துறை இடையிலான பாலத்தால் மார்த்தாண்டம் நகரம் பொலிவிழந்தது. வியாபாரமும் தொழில்களும் நலிவடைந்து பலர் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்த பாலத்தின் கீழ் பகுதி இன்னமும் முழுமை யாக சீரான போக்குவரத்துக்கு பயன்படாத நிலையில் உள்ளது. பார்வதிபுரம் மேம்பாலமும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து விட்டது. பார்வதிபுரம் மாவட்டத்தின் மேற்கு பகுதியை இணைக்கும் முக்கியப் பகுதி யாகும். ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி யிலிருந்து திரும்பும் மேற்குப்பகுதியைச் சேர்ந்த நோயாளிகளும், முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் மேம்பாலத்தில் ஏற முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். இது மாற்றுத்திறனா ளிகள் உரிமைச்சட்டம் 2016 வழங்கி யுள்ள ‘எளிதில் அணுகுதல்’ என்கிற குறிக் கோளுக்கு எதிரானது என்கிறார் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பேராசிரி யர் த.மனோகர ஜஸ்டஸ். மின்தூக்கி வசதி யுடன் நவீன முறையில் பாலம் அமைப்ப தாக கூறியது நிறைவேற்றப்படாத நிலையில் மேம்பாலத்தில் நடந்து பார்த்தார் அமைச்சர் பகவத் கிஷண். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில் பாஜக நடத்தும் நாடகங்கள் தேசிய நெடுஞ்சாலை களில் தொடங்கியிருக்கிறது. கடந்த முறை தேர்தல் தோல்விக்கான காரணங்களில் ஒன்றான மேம்பாலத்தில் அடுத்த தேர்த லுக்கான பிரச்சாரம் தொடங்கியிருக்கிறது. மக்கள் மீண்டும் பாடம் புகட்டத் தயாரா கவே இருக்கிறார்கள்.
பள்ளிவாசலில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு
தூத்துக்குடி, ஜூலை. 13- ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை திருச்செந்தூரில் மீட்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அலி மூப்பன் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி நாகூர் மீராள். இந்த தம்பதிகளுக்கு நஜிலா பாத்திமா(3) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு சாகுல் அமீது தனது குடும்பத்துடன் சென்றார். அங்கு இரவில் கணவன்-மனைவி 2 பேரும் குழந்தையுடன் பள்ளிவாசலில் தூங்கினர். நள்ளிரவில் அங்கு வந்த ஒரு மர்ம நபர் குழந்தையை கடத்திச் சென்றார். இதுதொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை தேடி வந்தார். மேலும் மாவட்ட எஸ்பி சரவணன் உத்தர வின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். ஆத்தங்கரை பள்ளி வாசல் மற்றும் அதனை சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புகள், கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஆண் ஒருவர் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கடத்தி செல்வதும், சிறிது தூரம் நடந்து சென்ற பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த காரில் ஏறி அந்த நபர் தப்பித்து செல்வதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த காரை அடையாளப்படுத்தி தூத்துக்குடி, குமரி மாவட்ட எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சாலைகளில் காவல் துறையினர் அதிரடி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையே புதனன்று அதிகாலை திருச்செந்தூர்-கரம்பைவிளை சாலையில் 3 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று தனியாக அழுது கொண்டிருப்பதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்செந்தூர் காவல்துறை யினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை யினர் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்த குழந்தை ஆத்தங் கரை பள்ளிவாசலில் மர்ம நபரால் கடத்தப்பட்ட நஜிலா பாத்திமா என்பது தெரியவந்தது. இதற்கிடையே கடத்தல் கும்பலை தேடி கூடங்குளம் காவல்துறையின ரும் அந்த இடத்துக்கு வந்தனர். அதனை தொடர்ந்து போலீசார் குழந்தையின் பெற்றோரை அழைத்து திருச்செந்தூர் சென்று குழந்தையை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர். அதன்படி புதன் காலை குழந்தை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே குழந்தையை கடத்திய நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் தர்காவில் கந்தூரி விழா
தூத்துக்குடி, ஜூலை 13 தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற தர்கா சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் தர்காவில் கந்தூரி விழா நடைபெற்றது. இதையொட்டி முதல்நாள் பீமா தைக்கா தெருவில் இருந்து அரண்மனை கொடி ஊர்வல மாக எடுத்துவரப்பட்டது. அதன் பின் கொடியேற்றி கந்தூரி விழா துவங்கியது. தொடர்ந்து ராத்திரி சந்தை பக்கீர் மஸ்தான் சாகீப் தர்காவில் விளக்கு ராத்திரி நடைபெற்றது. மறுநாள் தப்பருக் என்னும் நேர்ச்சை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கந்தூரி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
நாகர்கோவில் எஸ்.எல்.பி மைதானத்தில் ஜுலை 16, 17: உணவுத் திருவிழா; ஆட்சியர் அறிவிப்பு
கன்னியாகுமரி, ஜுலை 13- கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையும் இணைந்து ஜுலை 16, 17 ஆகிய இரு தினங்கள் எஸ்எல்பி அரசு மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் Eat Right Mela என்ற மாபெரும் உணவுத்திரு விழாவை ந டத்த உள்ளன. உணவு திருவிழா நடைபெறுவதையொட்டி கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்: இந்த உண வுத்திருவிழாவில் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் புகழ்பெற்ற உணவு பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு மக்களின் பார்வைக்கும் விற்பனைக் கும் வைக்கப்பட உள்ளது. உதாரணமாக கோவில்பட்டியிலி ருந்து கடலை மிட்டாய், தூத்துக்குடியிலிருந்து மக்ரூனும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பால்கோவாவும், மதுரையி லிருந்து ஜிகர்தண்டாவும், மணப்பாறை முறுக்கும், ஊட்டி சாக்லேட் மற்றும் வர்க்கிகள் போன்ற பல்வேறு உணவு பதார்த்தங்கள் மற்றும் தெருவோர உணவகங்கள் அனை த்தும் ஓரே இடத்தில் அரங்கு அமைத்து விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைசிறந்த சமையல் கலைஞர்களை கொண்டு பாரம்பரிய உணவுகள் அனைத்தும் உடனுக்குடன் சமைத்து பொதுமக்களுக்கு விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. முதல் நாளான ஜுலை 16 சனிக்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை பகல் ஒரு மணி வரை பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாணவ மாணவி யர் களுக்கிடையேயான ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவற்றின் இறுதி சுற்று நடைபெறும். மாலை 3 மணிக்கு மதுரை குழுவினரின் புகழ்பெற்ற பல்சுவை நிகழ்ச்சிகளும் யோகா நடனமும் நடைபெற உள்ளது. மாலை 6.30 மணிக்கு சொல்வேந்தர் கலைமாமணி சுகி சிவம் தலைமையில் ‘உணவை கொண்டாடும் உன்னதம் நம்மில் உண்டு / இல்லை’ என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது. இரண்டாம் நாளான ஜுலை 17 அன்று கன்னியாகுமரி கடற்கரை சாலை - திருவேணி சங்கமம் முதல் ஜீரோ பாயின்ட் வரை ஈட் ரைட் வாக்கத்தான் (நடைபயணம்) நடை பெறவுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 2 மணி வரை பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் எஸ்எல்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். மேலும் பொதுமக்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் பங்குபெறும் சமையல் போட்டி யும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்களும் மாணவ, மாணவியரும், கலந்து கொள்ள உள்ளனர். மாலை 3 மணி முதல் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாலை 5 மணி முதல் சேலம் புகழ் இன்னிசைக் குழு வினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். அதில் விஜய் டி.வி சூர்ப்பர் சிங்கர் புகழ் கார்த்திக்-மாது தம்பதியினர் ஐஸ்வர்யா மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர் யோகி சேகர் ஆகியோர் கலந்துகொண்டு மகிழ்விக்கவுள்ளனர், இந்நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சிவப் பிரியா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வி.செந் தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேது ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.