districts

மதுரை முக்கிய செய்திகள்

தேனி அருகே விபத்து  கூலித் தொழிலாளி பலி 

தேனி, மார்ச் 18- வீரபாண்டி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாக னம் மீது தனியார் பேருந்து மோதியதில், இருசக்கர வாக னத்தில் சென்ற கூலித் தொழிலாளி    உயிரிழந்தார். தேனி மாவட்டம், வீரபாண்டியைச் சேர்ந்தவர் மாரியப் பன் மகன் மாரிச்சாமி(38). கூலித் தொழிலாளியான இவர்,  வீரபாண்டியிலிருந்து உப்பார்பட்டிக்கு இருசக்கர வாக னத்தில் சென்றுள்ளார். அப்போது, உப்பார்பட்டி விலக்கு  பகுதியில் சின்னமனூரிலிருந்து தேனி நோக்கி சென்ற தனி யார் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த மாரிச்சாமி தேனி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறை யினர்  பேருந்து ஓட்டுநர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஜெயகுரு பிரகாஷ்(33) என்பவரை கைது செய்து விசாரிக்கின்ற னர்.

சிவகங்கை அருகே  ஊரணியில் மூழ்கி 3 சிறார்கள் பலி 

சிவகங்கை, மார்ச் 18- சிவகங்கை மாவட்டம் படமஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்தனர். புதுக்கோட்டை சிவகங்கை எல்லை பகுதியில் சிவ கங்கைக்கு உட்பட்டது உலகம்பட்டி கிராமம். இந்த  கிரா மத்தில் நாகராஜன், அவரது சகோதரர் லட்சுமணன் ஆகி யோர் வசித்து வருகின்றனர். நாகராஜன்  மகள் யாழினி என்ற மீனாட்சியும் (10), லட்சு மணன்  மகன்களான மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகிய  மூன்று பெரும் சேர்ந்து படமஞ்சி என்ற கிராமத்தில் உள்ள  செட்டி ஊரணியில் குளிக்க சென்றுள்ளார். இதில் ஒரு வர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர் சிறு வர்களின் உடல்கள் குளத்தில் மிதந்தன. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்தனர் ,அவர்கள் அளித்த தகவலின்பேரில் வந்த  உலகம்பட்டி போலீசார், தீயணைப்பு வீரர்கள் பொதுமக்க ளுடன் இணைந்து சிறார்களின் உடல்களை கைப்பற்றி  பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரி ழந்துள்ளது அந்த கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது. இச்சம்பவம் குறித்து உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே தனியார் பள்ளி வாகனம்  பாறையில் மோதி விபத்து  கிளீனர் பலி -  இருவர் காயம் 

மதுரை, மார்ச் 18-  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்  டில்  தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் வாகனம்  மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது மேட்டுப்பட்டி கிராமத்தின் அருகில்  நிலை  தடுமாறி சாலையோரத்தில் உள்ள பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தின் கிளீனரான  டி.கரிசல்பட்டியைச் சேர்ந்த போதராஜ் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவன், ஒரு மாணவி காயமடைந்து, உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த  சிந்துபட்டி  காவல்துறை யினர்  போதராஜின் உடலை கைப்பற்றி  உசிலம்பட்டி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து  குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

கருகல் நோயால்  முந்திரி விவசாயம் பாதிப்பு கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

கடமலைக்குண்டு, மார்ச் 17-  தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, வாலிப்பாறை, மயிலாடும்பாறை, மூலக்கடை, முத்தாலம்பாறை உள்ளிட்ட கிராமங்களில் கொட்டை முந்திரி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வரு கிறது.  அடுத்த மாதம் கொட்டை முந்திரி சீசன் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் மரங்களுக்கு மருந்து தெளித்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வருசநாடு, குமணன்தொழு, வாலிப்பாறை பகுதி கொட்டை முந்திரி மரங்களில் கருகல்  நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்ட மரங்களில் உள்ள இலைகள் அனைத்தும் காய்ந்து  உதிர்ந்து விடுகின்றன. விவசாயிகள் மருந்துகள் தெளித்தும் கருகல் நோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடிய வில்லை. மேலும் நோய் பாதிப்பு அடுத்தடுத்த மரங்க ளுக்கு வேகமாக பரவி வருகிறது. கருகல் நோய் பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டு கடமலை-மயிலை ஒன்றியத்தில் கொட்டை முந்திரி விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்  படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருகல் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சி

திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டடத்தில்  மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக மகளிர் தின  கருத்தரங்கம். நேரம்:காலை 10 மணி. பங்கேற்பு: மாதர்  சங்க தலைவர்கள் எஸ்.வாலண்டினா, ஜி.ராணி, சிஐடியு  மாநிலச் செயலாளர் எஸ்.மகாலட்சுமி.

கோவில் மரங்களை வெட்டியவர்களை  கைது செய்யக் கோரிக்கை

சின்னாளப்பட்டி, மார்ச் 18-   கோவில் மரங்களை வெட்டியவர்களை  கைது செய்ய  வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் ஆத்தூர்  ஒன்றியச் செய லாளர் பிச்சைமணி விடுத்துள்ள அறிக்கையில், திண்டுக் கல் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியில் பல ஏக்கர்  பரப்பளவில் மா மரங்கள், தென்னை மரங்கள் உள்ளன.  இதில் இந்துசமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான  சடையாண்டி கோவில் அக்கமார்சாமி கோவிலில் உள்ள மரங்களை வெட்டிய கயவர்கள் மீதும் வாங்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார். இதுகுறித்து  பட்டிவீரன்பட்டி காவல் நிலை யத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஊராட்சிகளிலும்  மார்ச் 22 இல் கிராம சபைக் கூட்டம்  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

சிவகங்கை, மார்ச் 18- உலக தண்ணீர் தினமான மார்ச் 22 அன்று அனைத்து  கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட  வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, உலக தண்ணீர் தினத்தன்று காலை 11 மணி யளவில் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு, கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. அன்றையதினம் நடைபெறும் கிராம சபைக் கூட்டத் தில், அவ்வூராட்சியில் உலக தண்ணீர் தினத்தின் கருப் பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவா திக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான  குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து  விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம்,  கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024   (VPDP)  தூய்மை பாரத  இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஜல் ஜீவன் இயக்கம் ஆகிய கூட்டப்பொருட்கள் இக்கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது  கலந்து கொள்ள வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட  ஆட்சித்தலைவர்  ப.மதுசூதன் ரெட்டி  தெரிவித்துள்ளார்.

1.25 டன் ரேசன் அரிசி கடத்திய பாஜக பிரமுகர் உட்பட 2 பேர் கைது

விருதுநகர், மார்ச் 19- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே ரேசன் அரிசியை கடத்தியதாக பாஜக பிரமுகர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேசன்  அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுதது, போலீசார் அங்கு வாகன சோதனை நடத்தி னர். அதில், ஒரு சரக்கு வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 25 மூடைகளில் ரேசன் அரிசி இருப்பது தெரிய  வந்தது. அதன் மொத்த எடை 1250 கிலோ ஆகும். இதையடுத்து, வாகனத்தில் வந்தவர்களிடம் விசா ரணை மேற்கொண்டனர். அதில், சங்கரன்கோவிலைச் சேர்ந்த தனியார் அரிசி ஆலைக்கு கடத்திச் செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, ஆலை உரிமையாளர்  செந்தூர்பாண்டி, பாஜக பிரமுகரான ஆழ்வார்க்குறிச்சி யைச் சேர்ந்த சுடலைமணி(36), ரெட்டியபட்டியைச் சேர்ந்த  வரதன்(21) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.  இதில் வரதன், சுடலைமணி ஆகியோரை கைது செய்தனர்.  ஆலை உரிமையாளரைத் தேடி வருவதோடு, கடத்தலுக்கு  பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், ரேசன் அரிசி ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நாளை முதல் மதுரையில் நடைபெறுகிறது

மதுரை, மார்ச் 18- மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு  முகாம் நடத்தப்படவுள்ளது என்று மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுமைக்கும், உடல் இயக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மற்றும் மன வளர்ச்சி குன்றியோர்களுக்கு கல்விக்காக, பணிபுரிவதற்காக, பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்காக அவர்  கள் வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப் பட்ட நிறுவனத்திற்கு சென்று வர இலவச  பேருந்து பயண சலுகை பெற்று பயனடை யும் விதமாக சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்  திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்  நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து நடத்தப்படவுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கு  மார்ச் 20,  21, 22 ஆகிய மூன்று  தினங்களிலும், உடலியக்க குறைபாடுடை யோர், காது கேளாதோர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி களுக்கு மார்ச் 23, 24 ஆகிய 2 தினங்களி லும் மொத்தம் 5 நாட்களுக்கு இலவச பயண  அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம்  நடைபெறவுள்ளது. ஏற்கனவே இவ்வலுவலகம் வாயிலாக இலவச பயண அட்டை பெற்றுள்ள பார்வை யற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்  திறனாளிகளுக்கான அடையாள அட்டை  நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போர்ட்  சைஸ் போட்டோ, பழைய பேருந்து பயண  சலுகை அட்டை அசல் மற்றும் நகல் ஆகி யவையும்   உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திற னாளிகளுக்கான அடையாள அட்டை நகல்,  குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ்  போட்டோ, பழைய பேருந்து பயண சலுகை  அட்டை அசல் மற்றும் நகல், கல்விக்காக, பணிபுரிவதற்காக, பயிற்சி புரிவதற்காக மற்றும் பயனுள்ள காரணத்திற்கான சம்  பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப் பட்ட சான்று ஆகியவையும் கொண்டுவர வேண்டும்.   மதுரை எல்லீஸ் நகர், அன்சாரி நகர் 7-வது தெருவில் அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ.மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளியில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து  பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.