districts

img

ஆழ்வார்புரத்தில் மதுபோதையில் ஆட்டோக்களை சேதப்படுத்தி அட்டூழியம்: 3 பேர் கைது

மதுரை, ஜூன் 2- மதுரை ஆழ்வார்புரத்தில் மதுபோதை யில் ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி அட்டூழியம் செய்த  3 பேரை காவல்துறையினர் கைது செய்த னர். மதுரை ஆழ்வார்புரத்தில் மீனாட்சி ஆட்டோ நிலையம் உள்ளது. இங்கு  வாட கைக்கு ஆட்டோ ஒட்டி வருகின்றனர். இந்  நிலையில் ஜூன் 1 அன்று ஆட்டோ நிலை யத்திற்கு ஆழ்வார்புரம் புளியந்தோப்பு பகு தியைச் சேர்ந்த கார்த்திக், அழகுபாண்டி, சதாம் ஹூசைன் ஆகியோர் வந்து, ஆட்டோ  வேண்டும் என்று கேட்டுள்ளனர். இவர்கள்  மதுபோதையில் இருந்ததாக கூறப்படு கிறது.  இதற்கு நிலையத்தில் இருந்த ஹரி ஹரன், ஆட்டோ ஓட்டுநர்கள் யாரும் இப்  போது இல்லை.நானும் சாப்பிட போக  வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால்  ஆத்திரமடைந்தவர்கள் தகாத வார்த்தை களால் திட்டி, ஹரிஹரனை கல்லால் தாக்கி, ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத் துள்ளனர். இவர் சத்தம் போடவே, தடுக்க வந்தவர்களையும் தாக்கியுள்ளனர். இது குறித்து ஹரிஹரன் மதிச்சியம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர்.  இப்பகுதியில் சமூக விரோதிகளின் அட்டூழியங்கள் தொடர்ந்து நடைபெறுவ தாகவும் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்துபணியில் ஈடுபட்டு தடுக்க வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்களும் பொதுமக்க ளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.