மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு மதுரை வடக்கு 2 ஆம் பகுதிக் குழு சார்பில் மீனாம்பாள்புரம் - குலமங்கலம் மெயின் ரோட்டில் பகுதிக்குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது .மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் ஆகியோர் உரையாற்றினர். மாநில மாநாட்டு நிதியாக ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ,மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் ஆகியோரிடம் பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு, மாவட்ட குழு உறுப்பினர் கே. அலாவுதீன் உள்பட பகுதிக்குழு உறுப்பினர்கள் வழங்கினர்.