districts

img

மேலவளவு: 23 ஆண்டுகளாக தீர்க்கப்படாத சுடுகாட்டு பிரச்சனை

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவு கிரா மத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்  ஊராட்சித் தலைவருக்கு போட்டி யிட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் உட்பட ஏழு பேர்  கொடூரமாக கொலை செய்யப்பட்ட னர். இந்தச் சம்பவம் தமிழகம் முழு வதும் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தியது. சம்பவம் நடைபெற்ற தினத்திலிருந்து பத்தாவது நாள்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளரும் விடுதலைப் போராட்ட வீரருமான  என்.சங்கரய்யா (101) நிகழ்விடத் திற்கு சென்று பட்டியலின மக்களின் துயரத்தில் பங்கேற்று உயிரிழந்த ஏழுபேருக்கு அஞ்சலி செலுத்திய தோடு, தீண்டாமைக் கொடுமை தீர வேண்டுமென்றால் நிலச் சீர்திருத்  தம். அவசியம் என்று வலியுறுத்தி னார். தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி யோடு நடத்தி வருகிறது. இந்தத் தருணத்தில் மேல வளவு முழுமையாக இன்னும் மாற வில்லை. சிறிய மாற்றத்தையே கண்டுள்ளது என்கின்றனர் பட்டிய லின மக்கள் சம்பவத்தின் 25 வது ஆண்டு  நினைவு நாளன்று தனது தந்தை முருகேசனின் மரணம் குறித்துப் பேசிய அவரது மகள், “என் தந்தை செய்த தியாகத்தை நினைத்து நானும் எனது குடும்பத்தினரும் பெருமைப்படுகிறோம், ஆனாலும்,  ஒவ்வொரு நாளும் எனது தந்தை இல்லை என்பதை மறக்க முடிய வில்லை என்றார்.

மணிமேகலையின் தந்தை யிடம் திங்களன்று தொலைபேசி யில் தொடர்பு கொண்டு பேசிய போது, எனது பேரன் விமல் 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு படிக்கிறான். இன்னொரு பேத்தி  சொர்ணம் எம்.ஏ.பி.எட்., படித்துள் ளது. ஒரு பேத்தி முருகேஷ் 10-ஆம்  வகுப்பு படிக்கிறது என்றார்.  திங்களன்று பிற்பகல் மறைந்த மேலவளவு முருகேசனின் மனைவி மணிமேகலையிடம் பேசி யபோது, “எனது பிள்ளைகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டு மென்றார். கிட்டத்தட்ட அவர் பேசி யதை விட அவர் அழுத நேரம் தான்  அதிகம்” அவ்வளவு சிரமங்களை அவர் சந்தித்து வருகிறார். அவர்  கூறும் விஷயங்களின் உண்மைத் தன்மையை தமிழக அரசு விசா ரித்து வழிகாட்டினால் நல்லது.

23 ஆண்டு காலமாக தீர்க்கப்படாத கோரிக்கை

மேலவளவு தலித் மக்களுக் கான சுடுகாட்டு பாதைப் பிரச்சனை யைக் கூட கடந்த 23 ஆண்டுகளாக  அரசாங்கம் தீர்க்கவில்லை. இப்பிரச்சனை 25-ஆம் ஆண்டு  நினைவு தினத்திலும் எதிரொலித் தது. இது குறித்து திங்களன்று நமது செய்தியாளரிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன், “ பட்டியலின மக்கள் சுடுகாட்டிற்கு செல்வதற்கு குறிப் பிட்ட தூரமே சாலை வசதி உள்  ளது. அதைத் தொடர்ந்து நிலங்கள், ஓடை, புறம்போக்கு நிலங்கள் உள்ளது. 23 ஆண்டுகால கோரிக் கையில் தமிழக முதல்வர் தனிக்கவ னம் செலுத்த வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில், பட்டியலின மக்கள் சமுதாயக் கூடம் வேண்டும் என நீண்ட நாட்க ளாக வலியுறுத்துகின்றனர். இங்  குள்ள தொகுப்பு வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. சுகாதார வசதிகள் மேம்படுத்த வேண்டும். குடிநீர்வசதியை மேம்படுத்த வேண்டும். இதற்கு தமிழக அரசு  தனியாக நிதி ஒதுக்கி பணிகளைத் தொடங்க வேண்டும் என்றார். இதற்கிடையில் மேலவளவில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி யில் நீண்டகாலமாக ஓட்டு கட்ட டமாக இருந்த பேருந்து நிலை யத்தை, கான்கிரீட் கட்டடமாக மாற்ற நடத்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சி யர், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அலைந்தது தனிக்கதை. மேலவளவில் (கான் கிரிட் கட்டடம்) பேருந்து நிறுத்தம் கட்ட ரூ. 5லட்சம் நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், தற்போது ஒன்  றியக் குழு உறுப்பினர் நிதியிலி ருந்து கட்டுமானப் பணி நடக்கி றது.