சிவகங்கை, செப்.23- ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் சிவ கங்கையில் ரயில் மறியல் நடைபெற்றது. இதில், 500 பெண்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை வழியாக செல்லும் ஏழு ரயில்கள் சிவகங்கை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. காரைக்குடி வரை இயங்கும் பல்லவன் விரைவு ரயிலை சிவ கங்கை-மானாமதுரை வரை நீடித்து தர வேண்டும், செங்கோட்டை-தாம்பரம் செல் லும் விரைவு, இராமேஸ்வரம்-வாரணாசி, ஹீப்ளி, அஜ்மீர், எர்ணாகுளம்-வேளாங் கண்ணி ரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும். மன்னார்குடி-மானா மதுரை ரயிலை மானாமதுரை வரை மீண்டும் இயக்க வேண்டும். செங்கோட்டை-சென்னை சிலம்பு ரயிலை தினம்தோறும் இயக்க வேண்டும். சிவகங்கை ரயில் நிலையத்திற்கு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். இராமேஸ்வரம்-சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கும், ஒன்றிய அர சுக்கும் மனு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள், வியாபாரிகள் பங்கேற்போடு ரயில் மறியல் போராட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மேலும் வியாபாரிகள் அனைத்து கடைகளையும் அடைத்தனர். போராட்டத்திற்கு சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் (பொ) கருப்புச்சாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, மாவட்டக் குழு உறுப்பினர் விஸ்வ நாதன், வழக்கறிஞர் மதி, ஒன்றியச் செயலா ளர் வேங்கையா (பொ), சிபிஐ சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் குணசேகரன், நகர் செயலாளர் மருது, காங்கிரஸ் நகர் தலை வர் சண்முகராஜா, மகளிர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் வித்யாகணபதி, திமுக ஆதிதிராவிடர் நலப் பிரிவு மாவட்டச் செய லாளர் சிங்கமுத்து, ஒன்றியச் செயலாளர் ஜெயராமன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், அயூப்கான், ஆறுமுகம், விசிக தலைவர் முத்துராஜா, ஆம் ஆத்மி கட்சி மாவட்டச் செயலாளர் பெரியார் ராமு, திக மாவட்டச் செயலாளர் புகழேந்தி உள் ளிட்டோர் கலந்துகொண்டனர். திருச்சி-மானாமதுரை ரயிலை மறித்து 500 பெண் கள் உட்பட 3 ஆயிரம் பேர் மறியலில் ஈடு பட்டனர். இதில், 2 ஆயிரம் பேர் கைது செய் யப்பட்டனர்.