திண்டுக்கல், ஜூன் 1-
பழனியில் 18 ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த தெய் வச்சிலை செப்புப்பட்டயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பழனி மலைக்கோவில் ஸ்தானிக மிராஸ் திரு மஞ்சன பண்டாரங்களான சக்திவேல், ஜெயன், கருப் பையா ஆகியோர் தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த தெய்வ சிலை செப்புப்பட்ட யத்தை தொல்லியல் ஆய் வாளர் நாராயண மூர்த்தி யிடம் கொடுத்து அதில் உள்ளவற்றை படிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதனை வாசித்து பார்த்த நாராயண மூர்த்தி கூறுகை யில், இந்த தெய்வச்சிலை செப்புப்பட்டயம் செங்குந்த முதலியார்கள் சூரசம்ஹார மண்டகப்படியை யொட்டி வழங்கிய செப்புப்பட்டயமா கும். இந்த பட்டயம் 1.7 கிலோ எடையுடனும், 18 செ.மீ உயர மும், 15 செ.மீ நீளமும் கொண்ட அளவுகளுடன் உள்ளது. பட்டயத்தின் முன்புறம் சூரிய சந்திரர்களும், அதன் அடியில் முருகன், பிள்ளை யாருடன் செங்குந்தர்களின் குலதெய்வங்களான நவ வீரர்களின் கைகளில் வாள், கேடயம் பொறிக்கப்பட்டுள் ளது. முருகனின் வலது புறம் செங்குந்தம் எனும் ஈட்டி பொறிக்கப்பட்டுள்ளது. பட்டயத்தின் பின்புறம் தமிழ் எழுத்துக்கள் வலது புறமும், வடமொழி கிரந்த எழுத்துக் கள் இடது புறமும் பொறிக் கப்பட்டுள்ளன. தமிழ்பகுதி யில் சண்முக வாத்தியாரின் ஒரு ஓலைச்சுவடி எழுதிய தாகவும், அதைப்பார்த்து நஞ்சய பண்டாரம் என்பவர் செங்குந்த முதலியார்களின் வேண்டுகோளின்படி தாமிர சாசனப்பட்டயம் எழுதிய தாகவும் குறிக்கப்பட்டுள் ளது. வடமொழி கிரந்த பகு தியில் ஸ்ரீதெண்டாயுதபாணி ஸகாயம் (தண்டாயுதபாணி துணை) என்று எழுதப்பட் டுள்ளது. அதன் அடிப்படை யில் பழனி மலை ஸ்தவராஜ பண்டிதர் கையெப்பம் இட்டுள்ளார். தமிழ், கிரந்தம் இரண்டு எழுத்து பொறிப்பு களும் 6 வரிகளில் மடக்கி மடக்கி எழுதப்பட்டுள்ளன. பட்டயத்தில் எழுத மிகுந்த இடமிருந்த போதும் இவ் வாறு ஆறு வரிகளில் மடக்கி எழுதியிருப்பது முரு கனுக்குரிய எண்.6 என்ப தால் இருக்கலாம். செப்பேடு குறிப்பிடும் சண்முக வாத்தி யார் யார் என்பது தெரிய வில்லை. ஓலைச்சுவடியை செப்புப்பட்டயத்தில் எழுதிய அவரது பேரனின் பெயரை யும் பட்டயம் குறிப்பிடவில்லை. ஆகவே சண்முக வாத்தி யார் பேரன் ஓலைச்சுவடியில் என்ன எழுதினார் என்பதை யும், அதை செங்குந்த முத லியார்களின் வேண்டு கோளுக்கிணங்க நஞ்சய பண்டாரம் எவ்வாறு செப்புப பட்டயம் எழுதினார். தற் போதைய செங்குந்த முத லியார்களின் இந்த தெய் வங்களுடன் கூடிய பட்ட யத்தை சூரசம்ஹார மண்ட கப்படிக்கு எடுத்துச் செல் வது வழக்கமாக இருப்ப தால் இது தொடர்பான மூல செப்புப்பட்டயம் ஒன்றயை நஞ்சய பண்டாரம் எழுதி யிருப்பார் என்பது புலனாகி றது. தற்போதைய பட்ட யத்தின் எழுத்தமைதி கி.பி.18 ஆம் நூற்றாண்டு.ஆகவே இதற்கு முன்பு மூல செப்புப் பட்டயமும் அதற்கு முன்பே ஓலைச்சுவடியும் இருந்தி ருக்க வேண்டும். அந்த இரண்டுமே தற்போது நமக்கு கிடைக்கவில்லை. ஆகவே செங்குந்த முதலி யார்கள் பழனி மலை முருக னுக்கு அளித்த கொடை மற் றும் அது தொடர்பான கட் டளை பற்றி நம்மால் அறிய முடியவில்லை என்று தெரி வித்தார்.
இந்த ஆய்வின் போது ஆய்வு மாணவர்கள் திரு வேங்கடம் மற்றும் அஜய் கிருஷ்ணா ஆகியோர் உட னிருந்தனர்.