தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் 168 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, உத்தமதானபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பதிவாளர்(பொ) முனைவர் ரெ.நீலகண்டன் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.