districts

img

காலை சிற்றுண்டி மூலம் 15.5 லட்சம் மாணவர்கள் பயன்

திண்டுக்கல், ஆக.11- பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் தேர்தல் அறிக்கையில் சொல்லப் படாத திட்டம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கே.ஆர்.பள்ளியில் நடைபெற்ற விழா வில் 117 மாணவ, மாணவி யர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர்  வழங்கினார்.  பின்னர் அமைச்சர் அர. சக்கரபாணி பேசுகையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதி திருக் குவளையில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் காலை சிற்றுண்டித் திட் டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதன் மூலம் 15 லட்சத்து 50 ஆயி ரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெற உள்ளனர். இது போன்ற திட்டம் எந்த மாநி லத்திலும் செயல்படுத் தப்படவில்லை. இந்த திட்டம் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வில்லை. இந்த அரசு மாணவச்செல்வங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றாக பார்த்து செய்து கொண்டி ருக்கிறது என்று தெரி வித்தார்.