districts

img

15 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் முதியவர் கைது

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி வயிறு வலிப்பதாக கூறவே அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. சிறுமியிடம் விசாரித்ததில் அவரது வீடு அருகே உள்ள பாலமுருகன் (எ) முருகேசன் (55) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. மேலும், இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரும் விஷயத்தை வெளியே சொல்லப்போவதாக மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் பாலமுருகனை போக்சோவில் கைது செய்தனர். தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.