சிவகங்கையில் சட்டவிரோத 15 மதுபானக் கூடங்கள் மூடல்
சிவகங்கை, மே 25- சிவகங்கை மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கிய 15 மதுபானக்கூடங்கள் மூடப்பட்டன. சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பேருந்து நிலை யம் அருகே மதுக்கடைகள் திறக்காத நேரங்களில் மதுக்கூடங்களிலும், அதனையொட்டி திறந்தவெளியிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் செயல்பட்ட 2 மதுக் கூடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலை யில் ஐஜி அஸ்ரா கார்க், இராமநாதபுரம் சரக டிஐஜி துரை உத்தரவின் பேரில் சிவகங்கை எஸ்பி செல்வராஜ் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் காவல்துறை யினர் அதிரடியாக மதுக்கூடங்களில் சோதனை நடத்தி னர். அப்போது சிவகங்கை, மதகுபட்டி, திருப்புவனம், காளையார்கோவில் பகுதியில் தலா 2 மதுக்கூடங்கள், மானாமதுரை பகுதியில் 5, சிங்கம்புணரி, இளையான் குடியில் தலா 1 என 15 மதுக்கூடங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை மூட நடவடிக்கை எடுத்தனர். மாவட்டம் முழுவதும் திறந்தவெளியில் 19 இடங்களில் மதுப்பாட்டில்களை விற்ற 19 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 306 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோத மாக மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சிவகாசி அரசு கல்லூரியில் மே 29 முதல் கலந்தாய்வு கல்லூரி முதல்வர் தகவல்
சிவகாசி, மே 25- சிவகாசியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி யில் வரும் மே 29 முதல் ஜூன் 5 வரை பாடப்பிரிவு வாரி யாக கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் இரா.தாமோ தரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: மே 29 இல் விளையாட்டு, மாற்றுத் திறனாளி, முன்னாள் இராணுவத்தினரின் வாரிசு, என்.சி.சி உள்ளோருக்கு சிறப்பு கலந்தாய்வு அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் நடை பெறும். ஜூன் 1 அன்று பி.காம், பி.பி.ஏ பிரிவுகள், பி.ஏ பொரு ளாதாரம், பி.ஏ.வரலாறு ஆகிய பிரிவுகளுக்கும், ஜூன் 2இல் பி.எஸ்.சி கணிதம், இயற்பியல், கணித அறிவியில், வேதி யியல் பிரிவுகளுக்கு காலை 9 மணிக்கும், மதியம் 1 மணிக்கு தாவரவியல், விலங்கியல் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். மேலும், ஜூன் 5 காலை 9 மணிக்கு பி.ஏ தமிழ், ஆங்கி லம் ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
தேனி, மே 25- தேனி அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலியானது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி(65). சம்பவத்தன்று அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் தூக்கி வீசப்பட்ட தகரத்தை எடுக்க முயன்றபோது மின்வயரில் எதிர்பாராமல் கைபட்டு தூக்கிவீசப்பட்டார். மின்சாரம் தாக்கி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட அவரை க.விலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அழகர்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து அல்லி நகரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
தொடக்கக்கல்வி மாறுதல் கலந்தாய்வு கூட்டம் ஒத்தி வைப்பு
திண்டுக்கல், மே.25 மே 26 ஆம் தேதி நடைபெற இருந்த தொடக்கக் கல்வி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு கூட்டம் மே 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மே 25 ஆம் தேதியிட்ட கடிதத்தின்படி தமிழ்நாடு முழுவதும் வெள்ளியன்று நடைபெற இருந்த தொடக்கக்கல்வி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மே 29 ஆம் தேதி திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போல் அந்தந்த ஒன்றியங்களுக்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு கூட்டங்கள் மே 29 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த கலந்தாய்வு கூட்டம் மே 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப் பட்டுள்ளது. தொடக்கக்கல்வி அலுவலகத்தில் இயக்குந ரின் கடிதம் அனைத்து தொடக்கக் கல்வி மாவட்ட அலு வலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. (நநி)
கஞ்சாவிற்காக தேனிக்கு சுற்றுலா: விஜயகாந்த் மகன் ‘கண்டுபிடிப்பு’
தேனி, மே 25- தேனி மாவட்டம், உத்தமபாளை யத்தில் நடைபெற்ற தேமுதிக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வ தற்காக தேமுதிக நிறுவன தலைவர் விஜய காந்த் மகன் விஜய பிரபாகரன் தேனிக்கு வந்தார். அவர் செய்தியாளர்களை சந் தித்து பேசுகையில், கஞ்சா பயன்படுத்து வதற்காக தேனி மாவட்டத்திற்கு பெரும் பாலான இளைஞர்கள் சுற்றுலா வரு கின்றனர். அதே போல போதை காளான் பயன்படுத்துவதற்காக இளைஞர்கள் கொடைக்கானல் செல்கின்றனர். தமி ழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலி யானவர்களுக்கு இழப்பீடு வழங்கியது தேவையற்றது. அதிமுக தலைவர் யார் என அக்கட்சி தொண்டர்களுக்கு தெரிய வில்லை பின்னர் எப்படி எதிர்க்கட்சியாக செயல்பட முடியும். தேமுதிக நிறுவன தலைவர் விஜய காந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கஷ்டம் தான். இருந்தாலும் அவர் 100 ஆண்டுகள் நலமுடன் இருப்பார். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தலைமை முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
ஊதிய உயர்வு கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்,மே 25- வாரிசு வேலை, ஊதிய உயர்வு வழங்கிடக் கோரி இராமநாதபுரத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திட்டத்தலைவர் வி. முருகன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆர்.குருவேல் விளக்கிப் பேசினார். திட்ட செயலாளர் ஜி. காசிநாதன்,திட்ட பொருளாளர் சி.ரகுநாதன், கோட்ட செயலாளர் வி.ஆரோக்கியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் பாரில் சீல் வைத்த பூட்டு உடைப்பு
கடமலைக்குண்டு, மே 25- கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உட்பட தேனி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த 77 டாஸ்மாக் பார்கள் புதன்கிழமை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன. இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட அதே நாளான புதன்கிழமை மாலை மயிலாடும்பாறை டாஸ்மாக் கடை அருகே செயல்பட்டு வந்த பாரில் சீல் வைக்கப்பட்டிருந்த பூட்டை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக தகவலறிந்த கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் பாருக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக மயிலாடும்பாறை டாஸ்மாக் பணி யாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டர். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறுகையில், சீல் வைக்கப்பட்ட பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரி கள் புகார் பெறப்பட உள்ளது. அதன் பின்பு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு பூட்டை உடைத்த மர்ம நபர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
பெரியகுளம் அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி
தேனி, மே 25- பெரியகுளம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தேனி - அரண்மனைப்புதூரைச் சேர்ந்த இளை ஞர் உயிரிழந்தார். தேனி அருகே அரண்மனைப்புதூர்- முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் குரு பிரசாத் (21). இவர், தனது நண்பர்கள் பழனிசெட்டி பட்டியைச் சேர்ந்த ரகுபதி மகன் வரதராஜன்(21), சத்தி ரப்பட்டியைச் சேர்ந்த செல்வம் மகன் அஸ்வந்த்குமார்(16) ஆகியோருடன் வத்தலகுண்டுவிலிருந்து தேனிக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இருசக்கர வாக னத்தை குருபிரசாத் ஓட்டிச் சென்றார். அப்போது, வத்தலக்குண்டு-பெரியகுளம் சாலையில் தேவதானப்பட்டி அருகே எதிர் திசையிலிருந்து வந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற குருபிரசாத் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வரதராஜன், அஸ்வந்த்குமார் ஆகியோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குருபிரசாத்தின் தந்தை கோபால கிருஷ்ணன் அளித்த புகாரின் மீது, தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து , வேன் ஓட்டுநர் போடி, துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்த பாண்டிய ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.