மாமேதை காரல் மார்க்ஸின் 140ஆவது நினைவுதினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொளத்தூர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற மார்க்சின் உருவப்பட கண்காட்சியை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் திறந்து வைத்தார். இதில் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, விசிக பகுதிச் செயலாளர் சுபாஷ், மூர்த்தி, நாகலிங்கம், சுரேஷ், சீனிவாசன், சந்திரன், விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாமேதை மார்க்ஸ் 140வது நினைவு நாளை முன்னிட்டு தீக்கதிர் சென்னை பதிப்பு அலுவலகத்தில் இடைக்கமிட்டி செயலாளர் எம்.உஷாராணி தலைமையில் மார்க்ஸ் உருவப்படத்திற்கு ஊழியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.