districts

img

8 ஆவது நாளாக காமராசர் பல்கலை., ஊழியர்கள் போராட்டம்

ஊழியர் தீக்குளிக்க முயற்சி

மதுரை, ஏப்.21-  மதுரை காமராrர் பல்கலைக் கழகத்தில் 136 பணியாளர்கள்  பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 8-வது நாளாக ஏப்ரல் 21 வியாழக்கிழமையன்று தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழ கத்தின் 2013ல் இருந்து 10 ஆண்டு களுக்கு மேலாக பல்வேறு துறை களில் பணிபுரிந்து வந்த தற்காலிக மற்றும் தொகுப்பூதிய ஊழியர்கள் 136 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட தாக பல்கலைக்கழக நிர்வாகம் அறி வித்தது.  இந்நிலையில் பல்கலைக்கழகம் 4 நாள்கள் தொடர் விடுமுறை முடிந்து திங்களன்று திறக்கப்பட்டது. இதை யடுத்து தற்காலிக மற்றும் தொகுப்பூ திய பணியாளர்கள் தொடர் உள்ளி ருப்புப் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர். போராட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 136 பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், வியாழனன்று காலை போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தபோது காவல்துறையினர் போராட்டக்காரர்களை பல்கலைக்கழ கத்திற்கு உள்ளே விடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால் கோபம டைந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாற்றுத்திறனாளி ஊழியர் திடீரென தன் உடலில்  மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்றவைக்க முயற்சித்தார்.  இதனைக் கண்ட மற்ற நபர்கள் மற்றும் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்த னர். தற்போது பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது.  மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அது வரை எங்களது போராட்டம் தொடரும். மேலும் தமிழக முதல்வர் எங்களது போராட்டத்தை உணர்ந்து உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழி யர்கள் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன் அவர்களை நேரில் சந்தித்து  கோரிக்கை  மனு  அளித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலா ளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்ட  செயலாளர் மா. கணேசன், மூட்டா நிர்வாகிகள் செந்தாமரைக்கண்ணன், பேரா.முரளி ஆகியோர் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.