districts

img

பாஜக அரசை கண்டித்து சிபிஎம் மறியல்

விருதுநகர், செப்.7- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு,  வேலையின்மை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தின்  7 மையங்களில் மறியல் நடைபெற்றது. இதில் 611 பெண்கள் உட்பட 1305 பேர் கைதாகினர். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உள்ள  தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முக மது தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 150 பெண்கள் உட்பட 236 பேரை காவல்துறையினர் 

கைது செய்தனர்.

சிவகாசியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.முருகன் துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் பி.பாலசுப்பிரமணியன் (சிவகாசி), எம்.முனியசாமி (வெம்பக்கோட்டை), நகர் செயலாளர் ஆர்.சுரேஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருப்புக்கோட்டையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.முருகன் தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர்கள் எம்.கணே சன் (அருப்புக்கோட்டை), மார்கண்டன் (திருச்சுழி)  உட்பட பலர் பங்கேற்றனர். சாத்தூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.விஜயமுருகன் தலைமையில் மூத்த தலைவர் கே.சுப்பாராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. விஜயகுமார், எஸ்.தெய்வானை, ஒன்றியச் செயலா ளர் எஸ்.சரோஜா, நகர் செயலாளர் பி.பெத்தராஜ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். காரியாபட்டியில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.லட்சுமி தலைமையில் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் எம்.முத்துக்குமார், வட்டச் செயலாளர் ஏ.அம்மாசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவில்லிபுத்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  முன்பு மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் சுந்தர பாண்டியன், மாற்றுத்திறனாளி கள் பாதுகாப்பு சங்க மாநில நிர்வாகி நாகராஜன், சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய  செயலாளர்கள் சசிகுமார், பெனரி (வத்திராயி ருப்பு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இராஜபாளையம் ஸ்டேட் பேங்க் முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்டச் செயற்  குழு உறுப்பினர் குருசாமி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்க வில்சன், சிபிஎம் இராஜபாளையம் நகரச் செயலாளர் மாரி யப்பன், ஒன்றியச் செயலாளர்கள் முனியாண்டி (கிழக்கு), சந்தனகுமார் (மேற்கு), மூத்த தோழர்  கணேசன் மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை 

சிவகங்கை மாவட்டத்தின் நான்கு மையங்களில் நடைபெற்ற மறியலில் 725 பேர் கலந்து கொண்டு கைது செய்யப்  பட்டனர். காரைக்குடியில் நடைபெற்ற மறியலில்  மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அரு. மோகன், தாலுகா செயலாளர்கள் அழ கர்சாமி, ஆறுமுகம், செல்வராஜ் மற்றும் 50 பெண்கள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.  சிவகங்கை அரண்மனை வாசலில் தொடங்கி தலைமை தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50 பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.  மாவட்டச் செயலாளர் (பொ) கருப்புச்  சாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் மணியம்மா, சுரேஷ் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.  மானாமதுரையில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே. வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, ஒன்றி யச் செயலாளர்கள் ஆண்டி, அய்யம் பாண்டி, ராஜீ உட்பட பலர் பங்கேற்றனர்.  சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சேதுராமன் தலைமையில் ஊர்வலமாக சென்று ஐஒபி வங்கி முன்பு நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சேது ராமன், தாலுகா செயலாளர் காந்திமதி மற்றும் 30 பெண்கள் உட்பட 75 பேர் கைது  செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தின் 9 இடங்க ளில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 410 பெண்கள் உள்பட 1066 பேர் கைது செய்யப்பட்டனர்.  பரமக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியலில் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், தாலுகா செயலாளர் டி.ராஜா உள்ளிட்டு 133 பெண்கள் உள்பட 326 பேர் கலந்து கொண்டு கைதாகினர். இராமநாதபுரம் தலைமை தபால் நிலையம்  முன்பு நடைபெற்ற மறியலில் மாவட்டச் செய லாளர் வி.காசிநாதரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.குருவேல், தாலுகா செயலாளர் பி.செல்வராஜ் உள்ளிட்டு 20 பெண்கள் உள்பட 59 பேர் கைதாகினர்.  இராமேஸ்வரம் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.கருணாகரன், தாலுகா செயலாளர் ஜி.சிவா மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 125 பெண்கள் உட்பட 305 பேர் கைதாகினர். முதுகுளத்தூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கலையரசன், தாலுகா செயலாளர் வி.முருகன் உள்ளிட்ட 51 பெண்கள் உட்பட 126 பேர் மறியல் செய்து கைதாகினார். சாயல்குடியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.கண்ணகி, தாலுகா செயலாளர் பி.முத்துசாமி மற்றும் 49 பெண்கள் உட்பட 68 பேர் கைதாகினர். கீழக்கரையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், தாலுகா செயலாளர் மகாலிங்கம் தலைமையில் நகர் மன்ற உறுப்பினர் சூரியகலா உள்ளிட்டு 28 பெண்கள் உட்பட 55 பேர் கைதாகினர். திருவாடானையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துராமு, தாலுகா செயலாளர் கே.ஜெயகாந்தன், மூத்த தோழர் ஏ.நாகநாதன் உட்பட 42 பேர் கைதாகினார். கடலாடி கிழக்கு சிக்கல் மையத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.மயில்வாக னன், தாலுகா செயலாளர் எஸ்.போஸ், கே.பச்சமால் உட்பட 33 பேர் கைதாகினார்  கமுதியில் தாலுகா செயலாளர் கண்ணதாசன் உட்பட 52 பேர் கைதாகினர்.