இராமநாதபுரம், செப்.25- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சென்னை , பாரதி மகளிர் கல்லூரி வளா கத்தில் நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் , அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 - ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவி களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் உத வித் தொகை வழங்கும் “ புதுமைப் பெண்” திட்டத்தினை தொடங்கி வைத்தார் . இதனைத்தொடர்ந்து இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்ட துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் கல்லூரி மாணவிகளுக்கு டெபிட் கார்ட் மற்றும் புதுமைப்பெண் பெட்ட கத்தை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் கடலாடி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 29 மாணவிகளும், இராமநாதபுரம், அரசு பெண்கள் கலை கல்லூரி 94 மாணவிகளும், பரமக்குடி அரசு கலைக்கல்லூரி 75 மாணவிகளும், இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி 9 மாண விகளும், இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி 13 மாணவிகளும், கீழக்கரை முக மது சதக் பொறியியல் கல்லூரி 4 மாணவி களும், இராமநாதபுரம் முகமது சதக் ஹமீது பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 30 மாணவிகளும், இராமநாதபுரம் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் பெண்கள் கலை கல்லூரி 14 மாணவிகளும், இராம நாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி 26 மாணவிகளும், முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 13 மாணவிகளும், இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 55 மாணவிகளும், இராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி 3 மாணவிகளும்,
இராமநாதபுரம் வேலு மனோ கரன் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10 மாணவிகளும் என மொத்தம் 375 மாணவிகளுக்கு வழங்கினார். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உத வித்தொகை பெற்று பயன்பெற்ற மாணவி கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் . புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகையை பெற்ற ரம்யா கூறுகையில், தமிழ்நாடு முதல மைச்சர் என்னைப் போன்ற ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவியர்களின் கல்லூரி கனவை நனவாக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோ றும் ரூ .1000 உதவித்தொகை பெறும் திட்டத்தை துவக்கி வைத்து , இந்த மாதமே எனது வங்கி கணக்கில் ரூ .1000 வரவு வைக்கப்பட்டுள்ளது .எனது கல்லூரி படிப்பு முடிக்க இத்தொகை எனக்கு மிகவும் பேரு தவியாக இருக்கும். இத்திட்டத்தை துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்னைப் போன்ற கிராமப்புற மாணவி யர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இத்தகவலை இராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, எம்.ஏ., உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வா.பெ.வினோத் எம்.இ., ஆகி யோர் தெரிவித்தனர்.