districts

img

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: மேலும் 1.48 லட்சம் பேருக்கு ரூ.1000 வரவு!

சென்னை, ஜூலை 15- தமிழகத்தில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார். அதன்பின்னரும் பயனாளி கள் இணைக்கப்பட்டு, 1 கோடியே 15 லட்சம் பேருக்கு ரூ. 1000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2024 ஜூலை 15 முதல் மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கிகள் மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது.