districts

img

குழித்துறை மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.54 கோடியில் 383 வழக்குகளுக்கு தீர்வு

குழித்துறை, ஜுன் 27- குழித்துறை ஒருங்கமைக்கப்பட் ட நீதிமன்றத்தில் ஞாயிறு  அன்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைப்பெற்றது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி புருஷோத்தமன், சார்பு  நீதிபதி சரவணபவன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அச்சுதன், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெய காளீஸ்வரி, 2ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செல்வம் , முதலா வது குற்றவியல் நடுவர் மோசஸ் ஜெபசிங் ஆகியோர் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளில் சமபந்தப்பட்ட காப்பீடு நிறுவன வழக்கறிஞர்கள் , வழக்கு சம்மந்தப் பட்ட நபர்கள் மற்றும் அவர்களது வழக்கறி ஞர்கள் முன்னிலையில் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி வழக்குகள் உள்ளிட்ட 383 வழக்குகளில் ரூ.1,54,63,100  சமரச முறையில் தீர்வு காணப் பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.