தேனி, மார்ச் 14- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அத்துறையில் தனிக்கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை அறி வித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் , சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், நவீன செயற்கை கை மற்றும் கால், நவீன காதொலி கருவி, முடம் நீக்கும் சாதனம் போன்ற எண்ணற்ற உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்களை தமிழக அரசு வழங்கி ஒரு வரலாற்று சாத னையை நிகழ்த்தி வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் 21,476 நபர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. 15,583 நபர்களுக்கு ஒன்றிய அரசின் UDID திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்து மே-2021-ஆம் ஆண்டு முதல் ஜனவரி-2023 வரை மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட வங்கி கடன் மானியமாக 92 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.30 லட்சம் மதிப்பிலான மானியத்தொகையும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 79 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.63.40 இலட்சம் மதிப்பிலும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37.10 இலட்சம் மதிப்பிலும், மோட்டார் பொருத் திய தையல் இயந்திரம் 91 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.6.22 இலட்சம் மதிப்பி லும், நவீன செயலிகளுடன் கூடிய கைபேசி 340 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.44.04 இலட்சம் மதிப்பிலும், முட நீக்கியல் கருவி 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.75 இலட்சம் மதிப்பிலும், மூன்று சக்கர சைக் கிள் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.71 இலட்சம் மதிப்பிலும், மூன்று சக்கர நாற்காலி 41 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.15 இலட்சம் மதிப்பிலும் என 746 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.179.67 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக் காக வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 உதவித் தொகையினை ரூ.1,500-ஆக ஜனவரி-1 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தி வருகிறார்கள் அதனடிப்படையில், தேனி மாவட்டத் தில் தேனி வட்டத்திற்குட்பட்ட 1,309 மாற் றுத்திறனாளிகளுக்கும், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட 1,814 மாற்றுத்திறனாளி களுக்கும், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட 2,171 மாற்றுத்திறனாளிகளுக்கும்,
போடி நாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட 1,104 மாற்றுத்திறனாளிகளுக்கும், உத்தம பாளையம் வட்டத்திற்குட்பட்ட 3,154 மாற் றுத்திறனாளிகளுக்கும் என மொத்தம் 9,552 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந் திர உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலி ருந்து ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் வட்டம், தாமரைக்குளம் பேரூராட்சியை சேர்ந்த பானுப்பிரியா என்பவர் தெரிவிக்கையில், எனது ஒரு கை, பிறவிலேயே செயல் இழந்து விட்டது. இதன்மூலம் மாற்றுத்திற னாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று மாதம் ரூ.1,000 பெற்று வந்தேன். தற்போது முதலமைச்சர் மாற்றுத்திற னாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஜனவரி மாதம் முதல் ரூ.1,500 வழங்கிட உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தி வரு வதன் மூலம் எனக்கு ரூ.1,500 கிடைக் கப்பெற்று வருகிறது. எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்று எண் ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மாற் றுத்திறனாளிகளின் பாதுகாவலனாக திகழ்ந்து வருகின்ற முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இத்தகவலை தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீர பாண்டியன் தெரிவித்துள்ளார்.