சிவகங்கை, ஏப்.22- உலக மரபு நாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவ கங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரி, சிவ கங்கை தொல்நடைக் குழு ஆகியவற்றின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. யுனெஸ்கோ அறிவித்ததன் படி தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கவும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற் படுத்தவும் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறையில் தொன்மை போற்றுதும் என்னும் தலைப்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர், முனைவர் கண்ணன் தலைமை தாங்கினார். வரலாற்றுத் துறைத் தலைவர் (பொறுப்பு) முனைவர் வெண்ணிலா வரவேற்றார். சிவ கங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா நோக்கவுரையாற்றினார்.அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி. பக்கிரிசாமி , சிவகங்கை தொல் நடைக் குழு செயற்குழு உறுப்பினர்கள் வித்யா கணபதி, சையது இப்ராகிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதுரை தொல்லி யல் அலுவலர் பா.ஆசைத்தம்பி தமிழக தொல்லியல் ஆய்வுகளின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் கருத்துரை யாற்றினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்று தடயங்கள் மேற்பரப்பில் கேட்பாரற்று அதன் முக்கி யத்துவம் அறியாமல் சிதைந்து வருகின் றன. கற்சிற்பம், கல்வெட்டு, பழமையான தொல்லியல் எச்சங்களை சில சமூக விரோ திகள் சீரழித்து வருகின்றனர். வரலாற்று சின்னங்களை பாதுகாக்க மாணவர்கள், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரி வித்தார். மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் கண்ணன் கருத்துரையாற்றினார். முனைவர் து முனீஸ் வரன் தொகுத்து வழங்கினார்.