districts

img

‘சத்துணவுத்துறையில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புக’

சிவகங்கை,ஏப்.13- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் ஆர்.கலா ,மாநில பொதுச்செயலாளர் மலர் விழி ஆகியோர் பங்கேற்றனர்.  இக்  கூட்டத்தில் 38 ஆண்டுகளாக பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும்  சத்து ணவு திட்டத்தில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்து ணவுத்துறையோடு இணைக்க வேண்டும் .குடும்ப பாதுகாப்போடு மாத  ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.