districts

img

135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: கே.என்.அருண் நேரு எம்.பி., வழங்கினார்

பெரம்பலூர், ஜூலை 6 - பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் குழுவின் தலைவரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.அருண்நேரு தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.

 கூட்டத்தில் ஆட்சியர் க.கற்பகம், பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பெரம்ப லூர் நாடாளுமன்ற உறுப்பினர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அவர் தெரிவிக்கையில், “பெரம்ப லூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக் கையான பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரயில்  போக்குவரத்திற்கான திட்டத்தை கொண்டு  வர முழுமுயற்சி எடுக்கப்படும்.

பொதுமக்க ளுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கு தேவை யான திட்டங்கள் குறித்து இந்த ஆய்வுக்  கூட்டத்தில் அதிக நேரம் விவாதிக்கப்பட்டது.  மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை ஆழப்படுத்தி, தூர் வாரி, நீர்நிலைகளை மேம்படுத்தி நீர் மேலாண்மையை முறையாக செயல்ப டுத்திடவும் நடவ டிக்கை எடுக்கப்படும்.  முதல் பட்டியலிலேயே பெரம்பலூர்  மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரி  அறிவிப்பை வழங்க வேண்டும் என்று முதல மைச்சரிடம், அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 பெரம்பலூர் மாவட்டத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல, அரசின் திட்டங் களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க,  ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்கள் துறைசார்ந்த கோரிக்கைகளை எனது கவனத் திற்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.  அதனைத் தொடர்ந்து, மொத்தம் 135 பய னாளிகளுக்கு ரூ.1,18,08,190 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  கூட்டத்தில், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சியாம்ளாதேவி, மாவட்ட வரு வாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு உள்பட  அனைத்து அரசுத் துறையினர் கலந்து கொண்டனர்.