districts

இன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், மார்ச் 22 -  மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள்  கூட்டம் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலக  கூட்ட அரங்கில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 23.3. 2022 (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளி களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு தக்க சான்றுகளுடன் நேரில் அளிக்க லாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்மந்தப் பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படை யில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவனச் செய்யப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் முகா மில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர்  ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

;