districts

img

தொடர் வாசிப்பின் மூலம் மார்க்சிய தத்துவங்களை உணரலாம் கவிஞர்  நந்தலாலா பேச்சு

பெரம்பலூர், மார்ச்.6-  பெரம்பலூர் மாவட்ட தீக்க திர் வாசகர் வட்டம் சார்பில் ‘அறி வோம் மார்க்சியம்’ தொடர் பயிற்சி வகுப்பு மார்ச் 6., 13, 20, 27 ஆகிய தேதிகளில் நடை பெறவுள்ளது.  பயிற்சி வகுப்பு முதல் நாள் மார்ச் 6 அன்று தொடங்கியது. காலை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் பெ.நட ராஜன் வரவேற்றார். மக்களுக் கான மருத்துவர் கழக மாநில செயலாளர் சி.கருணாகரன் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்ட செயலாளர் ப.செல்வ குமார் முன்னிலை வகித்தார். ‘ஏன் எதை எப்படி படிக்க வேண் டும்’ என்ற தலைப்பில் தமுஎகச மாநில துணைத்தலைவர் கவி ஞர் நந்தலாலா சிறப்புரை ஆற்றி னார்.  அப்போது மார்க்சிய புத்த கங்கள் நிறைய உள்ளது. அதை படித்து வாசிக்கும் போது தான் மார்க்சிய தத்துவத்தை உணர முடியும், பெரியார், அம்பேத் கர் தான் இந்தியாவில் மார்க்சிய தத்துவத்தை அறிமுகப்படுத்தி யவர்கள். எனவே, தொடர் வாசிப்பின் மூலம் மார்க்சிய தத்துவங்களை உணரலாம் என தெரிவித்தார்.  மந்திரமா தந்திரமா எனும் அறவியல் விழிப்புணர்வு துரை தாமோதரன் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட செய லளர் எஸ்.அகஸ்டின் நன்றி கூறி னார்.  மதியம் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு முனைவர் பி.பாஸ்கர் வரவேற்றார். தமுஎகச மாவட்ட தலைவர் முனைவர் அகவி தலைமை வகித்தார். பண்பாட்டுத் தளத்தில் நாம் எனும் தலைப்பில் தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரை ஆற்றினார். மாலை நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு திராவிடர் கழக நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம் வரவேற்றார். மருத்து வர் சி.த.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். பெண்ணியமும் மார்க்சிய மும் எனும் தலைப்பில் மாதர் சங்க பொதுச்செயலாளர் பி.சுகந்தி சிறப்புரை ஆற்றினார். ஆசிரியர் த.திவ்யா நன்றி கூறினார். முனை வர் க.குமணன் தமிழாசிரியர் வ. வேல்மருகன் மற்றும் பா.வஸந் தன் ஆகியோர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினர்.