பெரம்பலூர், நவ.8 - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவ.7 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாடாலூர் அருகே தெரணி செல்லும் வழியில் வசிக்கும் குயவர் இனமக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், “பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடா லூர் தெரணி செல்லும் வழியில் மண்பானை செய்யும் குயவர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் பொ துக்கிணறு மற்றும் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. அனைவரும் பயன்படுத்தும் விதமாக அக்கிணறு அமைந் துள்ளதால், அதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் அதை தடுத்துள்ளனர். இதன்பொருட்டு, அப்பகுதி யின் குறுக்கே தீண்டாமைச் சுவரை எழுப்பி பொதுக் கிணற்றுக்கு வர முடியாதபடி செய்து, மகளிர் சுகாதார வளாகத்தையும் மூடும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்ப தோடு, உடனடியாக அந்த இடத்தில் கட்டியுள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எம். கருணாநிதி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கே.ராஜேந்தி ரன், சாலைப் பணியாளர் சங்க நிர்வாகி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.