districts

img

பால்கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் போராட்டம்

பெரம்பலூர்,அக்.19-   பசும்பாலின் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்த வேண்டும். மற்ற மாநிலங்களில் வழங்குவதைப் போல் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 5  ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், 50 சதவீத மானிய விலையில் கால்நடை தீவனங் களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அக்டோபர் 19 வியாழனன்று தமிழ கம் முழுவதும் ஆவின் நிறுவனங் கள் முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் தீரன் டெப்போ அருகிலுள்ள ஆவின் நிறுவனம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாநிலக்குழு உறுப்பினர் அ. செங்கமலை தலைமை வகித்தார். மாநில தலைவர் கே.முகமதுஅலி, மாநில துணைத்தலைவர் என். செல்லதுரை ஆகியோர் விளக்கிப் பேசினர். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், மக்கள் அதிகாரம் காவிரிநாடன் சிபிஐ, மாவட்ட செயலாளர் வி.ஜெயராமன், விசிக விவசாயிகள் அணி வீரசெங்கோலன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் அ.கலையரசி, கரும்பு விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.எஸ்.சக்திவேல் உள்ளிட்டோர் ஆதரித்துப் பேசினர்.  திருச்சிராப்பள்ளி  மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி வட்டக்குழுக்கள் சார்பில்  மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறை வட்ட செயலாளர் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமநாதன்,  விவசாயி கள் சங்க நிர்வாகிகள் சிதம்பரம், கோபாலகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோர் பேசினர்.  அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே இடைக்கட்டு கிராமத்தில்  ஆவின் பால் அலுவலகம் முன்பாக கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி னார். சிபிஎம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தொடங்கி வைத் தார். விவசாயிகள்  சங்க மாநிலச் செயலாளர் துரைராஜ்.மாவட்ட செயலாளர் மணிவேல் ஆகியோர் பேசினர்.