districts

img

பெரம்பலூர் கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்

பெரம்பலூர், செப்.23 - பெரம்பலூர் மாவட்டம் நகர்ப்பகுதி கடைவீதியில் அமைந்துள்ள கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத் தில் தீபாவளி 2022 சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ  வெங்கட பிரியா வெள்ளிக் கிழமை துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் நிறு வனம் தனது வாடிக்கை யாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும்  தீபாவளி பண்டிகையின் போது 30 சதவீத சிறப்பு  தள்ளுபடி விற்பனை திட்டத்தை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது. அதன்படி பெரம்பலூர் விற்பனை நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு தீபாவளி தள்ளுபடி விற்பனை ரூ.26.18 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டது. தற்போது 2022 தீபாவளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு சிறப்பு திட்டமாக “கனவு நனவு திட்டம்” என்ற திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. இத்திட் ்டத்தின் படி 10 மாத சந்தா  தொகை வாடிக்கையா ளரிடமிருந்து பெறப்பட்டு, 11- வது மற்றும் 12-வது மாத சந்தா தொகையினை கோ- ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகள் 20 சதவீத தள்ளுபடியுடன் வழங்கப்படும் என ஆட்சி யர் தெரிவித்தார்.

;