districts

பெரம்பலூர் 8-ஆது புத்தகத் திருவிழா  இன்று தொடங்குகிறது

பெரம்பலூர், மார்ச் 24- பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் பெரம்பலூர் எட்டாவது புத்தகத் திருவிழா சனிக்கிழமை தொடங்கி ஏப்.3-ஆம் தேதி  பெரம்பலூர் நகராட்சி திடலில் நடைபெறவுள்ளது. புத்தக திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகம்  தெரிவித்ததாவது:  புத்தகத் திருவிழாவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சிவசங்கர் துவக்கி வைக்கிறார். ஏப்.3-ஆம் தேதி வரை புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. பத்து நாள் திருவிழாவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்கள், ஈடன் கார்டன் கல்வி நிறுவனங்கள், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள், ஆதவ் பப்ளிக் பள்ளி, கோல்டன் கேட்ஸ் கல்வி நிறுவனங்கள், பிளஸ் மேக்ஸ் குழுமம் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.  ஏப்.3-ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தரேஸ்அஹமது சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்றார்.