districts

img

பெரம்பலூர்: சிபிஎம் வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்

பெரம்பலூர், பிப்.3-  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 21 வார்டுகளை கொண்ட பெரம்பலூர் நகராட்சி யில் 16 வது வார்டு வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் எ.கலையரசி போட்டியிடுகிறார்.  இந்நிலையில், எ.கலையரசி வியாழனன்று தனது வேட்பு மனுவினை பெரம்பலூர் நகரா ட்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்தார்.  சிபிஎம் வேட்பாளர் கடந்த கால சேவையினை பாராட்டி விசிக பெரம்பலூர் மாவட்ட செய்தித்தொடர்பாளர் வழக்கறி ஞர் இரா.ஸ்டாலின் டெபாசிட் தொகையினை செலுத்தினார்.  அப்போது திமுக கிளை செயலாளர் ஜெய்குமார், சுரேஷ் (எ) சந்திரசேகரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், விசிக நிர்வாகி வீரசெங்கோலன், சிபிஎம் மாவட்டக் குழு எம்.கருணாநிதி, பி.கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  தோழர் எ.கலையரசி 1996 ஆம் ஆண்டு மாதர் சங்க உறுப்பி னர், 1997 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலா ளர், 1998 ஆண் ஆண்டு மாதர் சங்க  ஒன்றிய தலைவர், 2000 ஆம் ஆண்டு மாதர் சங்க மாவட்ட தலைவர் மற்றும் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர், 2005 ஆம்  ஆண்டு மாதர்சங்க மாவட்ட செய லாளர், பின்னர் 2013 முதல் இன்று வரை சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக சேவை புரிந்து மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.