பெரம்பலூர், டிச 17 - கிராமப் புறங்களை மையமாகக் கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயம் சார்ந்த பல்வேறு விசயங்களுக்கு கடனுதவி பெற்று விவசாயிகள் பயன டைகின்றனர். இதில் பெரம்பலூர் தொ டக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் கோ ணேரிபாளையம் கிரா மத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர் 29.1.2022 அன்று விவசாய பயிர்க்கடன் பெற்றதன் காரணமாக, இப்கோ டோக் கியோ நிறுவனம் மூலம் தனிநபர் விபத்து காப்பீடு செய்யப்பட்டது. இந்நிலை யில் கடந்த 18.3.2022 அன்று, சீனிவாசன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்து விட்டது. சிகிச்சை பெற்று வந்த நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு 22.3.2022 அன்று இறந்து விட்டார். அதை தொடர்ந்து அவர் தனிநபர் விபத்து காப்பீடு செய்திருந்த நிலையில், பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இப்கோ டோக் கியோ நிறுவனத்திடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவருக்கு சேர வேண்டிய இழப்பீடு தொகை ரூ.4 லட்சத்திற்கான காசோ லையினை பெற்றது. பின்னர் வெள்ளியன்று பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் க. பாண்டியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர் ப.ஸ்ரீ.வெங்கடபிரியா, இறந்தவ ரது மனைவி சி.பாப்பாத்தி யிடம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி னார்.