districts

img

பட்டா கேட்டு சிபிஎம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

பெரம்பலூர், மே 7-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறு த்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.  இதனையொட்டி மே 6 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எஸ்.சிவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் எம்.கருணாநிதி, பெரம்பலூர், ஆர்.கோகுலகிருஷ்ணன், வேப்பந்தட்டை வி.செல்லமுத்து, குன்னம் எம்.செல்லதுரை, ஆலத்தூர் மாவட்டக்குழு ஏ.கே.ராஜேந்திரன், பி.ரெங்கராஜ், எஸ்.கே.சரவணன், மகேஸ்வரி, மருத்துவர் சி.கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் விளக்கி பேசினார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, அ.ரெங்கநாதன், எஸ்.பி.டி.ராஜாங்கம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  போராட்டத்தில், வீடற்ற அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், அனைத்து சமய கோவில்களில் குடியிருந்து வரும் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,  நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், பூலாம்பாடி, குரும்பலூர் ஆகிய பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி அனைவருக்கும் வேலை மற்றும் தினக்கூலி ரூ.300 முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சுமார் 1,500க்கும் மேலான மனுக்கள் வழங்கப்பட்டன.