districts

முகமூடி கொள்ளையர்கள் அராஜகம்: கத்தி முனையில் நகைகள், கார் கொள்ளை

பெரம்பலூர், மே 8 - பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் பாண்டி யன் (52), இவர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள  டாஸ்மாக் கடை அருகே தனது சொந்த வீட்டில் குடி யிருந்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (49), மகள் ரம்யா (32), மகன் விக் னேஷ் (27) ஆகியோர் உள்ளனர். ரம்யாவுக்கு சரவணன் என்பவருடன் திருமணமாகி சரவணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் பெற்றோருடனே தங்கிக் கொண்டு பெரம்பலூர் ராம கிருஷ்ணா பள்ளியில் ஆசிரி யையாக பணிபுரிந்து வரு கிறார். இவருக்கு பிரகதி (9)  என்ற ஒரு மகள் உள்ளார். மகன் விக்னேஷ் சிவில்  இன்ஜினியரிங் முடித்து விட்டு சென்னையில் உள்ள  தனியார் கட்டுமான நிறுவ னத்தில் பணிபுரிந்து வரு கிறார்.  சனிக்கிழமை இரவு 10 மணிக்கு வழக்கம்போல் வீட்டை உள் தாழ்ப்பாள் போட்டுவிட்டு பாண்டிய னும், அவரது மனைவி, மகள்  மற்றும் பேர குழந்தை ஆகி யோர் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். மாடிக்கு செல்லும் படிக்கட்டு வீட்டிற்குள்ளேயே உள்ளது.  இந்நிலையில் ஞாயி றன்று அதிகாலை சுமார் 2:30  மணியளவில் 5 மர்ம நபர்கள்,  வீட்டின் கதவை எட்டி  உதைத்து உள் தாழ்ப்பாளை  உடைத்து கீழ் அறை யில் தூங்கிக் கொண்டிருந்த வர்களை கையில் வைத்தி ருந்த இரும்பு ராடால் முது கில் தாக்கினர். பின்னர், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருந்த சமயத் தில், சத்தம் கேட்டு மேலே தூங்கிக் கொண்டிருந்த ரம்யா கீழே வர அவரிட மிருந்து தாலி செயின், வீட்டி லிருந்த செல்போன்கள் மற்றும் கார் சாவியை மிரட்டி எடுத்துக் கொண்டனர்.

 கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தப்பி சென்றனர். மாடியில் ரம்யா படுக்கையில் வைத்தி ருந்த அவரது செல்போன் மூலம் 100-க்கு போன் செய்து காவல் துறையினருக்கு தக வல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்ப லூர் போலீசார், நடத்திய விசா ரணையில், 3 பவுன் தாலி செயின், ஒன்றரை பவுன் மதிப்புள்ள 2 மோதிரங்கள் என மொத்தம் நான்கரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றையும் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தடய வியல் நிபுணர்களை கொண்டு, முகமூடி கொள் ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.  அம்மா பாளையத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய காவல் நிலைய திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.