பெரம்பலூர் மாவட்ட மக்கள் பல ஆண்டு களாக வலியுறுத்தி வரும் முக்கிய திட்டங்களை தமிழக அரசு எப்போது நிறைவேற்றும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். சிறப்பு பொருளாதார மண்டலம்
பெரம்பலூர் மாவட்டத் தில் தேசிய நெடுஞ்சாலையை யொட்டி ரூ.827 கோடி மதிப்பீட் டில் சிறப்பு பொருளாதார மண்ட லம் அமைக்கப் போவதாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்காக 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விவ சாயிகளிடமிருந்து கையகப்படுத் தப்பட்டன. இதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு, வீட்டில் ஒருவருக்கு வேலையும், வீட்டு மனையும் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். மேலும் இத்திட்டத்தை நிறை வேற்றிய 5 ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை அளிப்பதாகவும் வாக் குறுதி கொடுத்து, இந்திய அரசின் பெரு வணிகத்துறை யின் அனுமதி பெற்று ஆந்தி ராவைச் சேர்ந்த ஜிவிகே பவர் அண்டு ஆம்ப் இன்ப்ராஸ்ட் ரக்சர் லிட் அண்டு டிட்கோ-வும் இணைந்து விவசாயிகளிட மிருந்து குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்தினர். இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, 110 விதி யின்கீழ் பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து, அதில் விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலையை ஏற்படுத்த போவ தாக அறிவித்தார். ஆனால் இது வரை ஒன்றிய - மாநில அரசு கள் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க வில்லை. விமான உதிரி பாகங் கள் தயாரிக்கும் தொழிற் சாலையும் அமையவில்லை. வேலைவாய்ப்பும் ஏற்படுத்த வில்லை. சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க வேண்டும். இல்லையென்றால், நிலங்களை கொடுத்த விவசா யிகளிடமே அவற்றை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடாலூர் ஜவுளிப் பூங்கா பாடாலூர் அருகே சிப்காட் மூலமாக 100 ஏக்கர் பரப்பள வில் ஜவுளிப் பூங்கா அமைத்து அதில் திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட நகரங்களி லுள்ள 15-க்கும் மேற்பட்ட தொழி லதிபர்கள் மூலம் ஸ்பின்னிங் யூனிட்-களை துவங்கி ஆயிரக் கணக்கான பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த வும், தமிழகத்தில் அதிக அள வில் பருத்தி உற்பத்தி செய்யக் கூடிய மாவட்டமான பெரம்ப லூர் மாவட்ட விவசாயிகளிட மிருந்து பருத்தியை நல்ல விலைக்கு கொள்முதல் செய்வதாகவும் அறிவிக்கப்பட் டது. ஆனால் இத்திட்டமும் பல ஆண்டுகளாகியும் நிறைவேற்றப் படவில்லை. எனவே இத்திட்ட த்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பச்சைமலை சின்னமுட்லு நீர்த்தேக்கம்
பெரம்பலூரில் உள்ள பச்சைமலையில் உற்பத்தியா கும் கல்லாற்றின் குறுக்கே சின்னமுட்லு அருகே நீர்த்தேக் கம் அமைக்கப்பட்டால், 20 ஆயி ரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவ சாய நிலங்கள் பாசன வசதி பெறும். 150-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும். நிலத்தடி நீர்மட்ட மும் உயரும் என விவசாயி கள் நீண்ட காலமாக கோரி வரு கின்றனர். தமிழக அரசு கடந்த ஆண்டு இத்திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கி ஆய்வு செய்து, நிலத்தை அளந்து கல் வைத்துள்ளனர். ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்று வதற்கான நிதியை இதுவரை ஒதுக்கவில்லை. எனவே தேவை யான நிதியை ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
ஆவின் பால்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள் ளனர். பாடாலூரில் மாவட்ட பால் ஒன்றியம் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் பாலை மூலப்பொருளாக கொண்டு மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிக் கும் தொழிற்சாலை பெரம்ப லூரில் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் விவசாயிகளின் பாலை ஆவின் நிர்வாகம் முழுமை யாக கொள்முதல் செய்ய மறுக் கிறது. எனவே தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வும், விவசாயிகளிடம் வர வேற்பை பெற்றுள்ள முழு மானி யத்துடன் மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தை செயல் படுத்த வேண்டும் எனவும் வலி யுறுத்துகிறோம்.
மக்காச்சோளம்
பெரம்பலூர் மாவட்டத்தின் மானாவாரி நிலங்களில் அதிக மாக மக்காச்சோளம் பயிரிடப் படுகிறது. கலப்பு விதை களை தனியாரிடம் அதிகவிலை கொடுத்து வாங்க வேண்டி யுள்ளது. அவற்றின் முளைப்புத் திறனும் குறைவாக உள்ளது. எனவே வேளாண் துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவை யான கலப்பு விதைகளை வழங்க வேண்டும். ஆண்டுதோறும் படைப்புழு தாக்கத்தால் மக்காச் சோளம் விளைச்சல் பாதிக்கப் படுகிறது. படைப்புழு வராமல் தடுப்பதற்கான மருந்துகளை வேளாண்துறை மூலம் விவசாயி களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். மதிப்புக் கூட்டுப்பொ ருள் தயாரிக்கும் தொழிற் சாலையை பெரம்பலூரில் உரு வாக்கிட வேண்டும். மக்காச் சோளத்தை வயலிலேயே சேமித்து வைக்க முழு மானியத் துடன் தகரக் கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்ன வெங்காயம்
தமிழகத்திலேயே பெரம்ப லூரில்தான் அதிகமாக சின்ன வெங்காயம் விளைவிக்கப்படு கிறது. விவசாயிகளிடம் வெங்கா யம் இருக்கும் போது விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. வெங்கா யத்தை அரசே கொள்முதல் செய்து, ரேசன் கடை மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் வழங்கப்படும் வெங்காய தகர கொட்டகைக்கு விவசாயி களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. முழு மானியத்துடன் வெங்காய கொட்டகை அமைத் துத் தர வேண்டும். செட்டிக் குளத்தில் உள்ள குளிர்பதனக் கிடங்கை செயல்படுத்தி, ஏலம் நடத்தி கொள்முதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசால் நிதி ஒதுக்கப் பட்டு, அணை கட்டும் பணிகள் பாதியிலேயே விடப்பட்டுள்ள மருதையாறு நீர்த்தேக்க திட்டம், விசுவக்குடி நீர்த்தேக்க திட்டங் களை முழுமையாக நிறை வேற்றி, வரத்து வாய்க்கால் அமைக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகம் விளையக் கூடிய மக்காச் சோளம், பருத்தி, சின்னவெங்கா யம், கடலை, மரவள்ளிக் கிழங்கு, நெல் உள்ளிட்ட பயிர் களுக்கு தமிழக அரசு நிர்ண யித்துள்ள விலையின் அடிப்ப டையில் கொள்முதல் செய்ய வேண்டும். இயற்கை விவசா யத்தை ஊக்கப்படுத்த, முழு மானியத்துடன் மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். விவசாயி களுக்கு மானியத்தில் உழவடை கருவிகள் வழங்க வேண்டும். தமிழக அரசு ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டத்தை நடத்தி, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்களுக்கு, விலை தீர்மா னிக்க வேண்டும். விவசாயத்தை பாதிக்கும் கல்குவாரிகளை உட னடியாக தடை செய்ய வேண்டும். மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுக்கணக் கில் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் பெரம்ப லூர் மாவட்ட வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங் களை உடனடியாக தமிழக முதல்வர் நிறைவேற்றித் தர வேண்டுமென கேட்டுக் கொள் கிறோம்.
விரைவு போக்குவரத்து பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தல்
தமிழகத்தின் மைய பகுதி யான பெரம்பலூர் நான்கு ரோடு சாலையில் அமைந்துள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் எக்ஸ்பிரஸ் (விரைவு) பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென பயணி களும் மாவட்ட பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். பெரம்பலூர் நான்கு ரோடு சாலையில் நீண்ட தூர பயணம் செல்லும் விரைவு பேருந்து நின்று செல்லும் வகையில், விரைவு போக்குவரத்து பேருந்து நிலையம் அமைந்தால் சென்னை - கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலம் திருவ னந்தபுரம் வரை செல்லும் 600 -க்கும் மேற்ப்பட்ட விரைவு பேருந் துகள், இந்த பேருந்து நிலை யத்தில் நின்று செல்லும். இத னால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, பல மாவட்ட மக்களும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்க ளில் படிக்கும் மாணவர்களும் பயனடைவர். விரைவு பேருந்து நிலையம் அமைக்க அரசுக்கு சொந்த மான இடம் அருகிலேயே உள்ளது. மேலும் மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும், மருத்துவக் கல்லூரி அமைவ தற்கான அரசு தேர்வு செய்துள்ள அரசுக்கு சொந்தமான இடமும் இதன் அருகே அமைந்துள்ளது. எனவே பெரம்பலூர் நான்கு ரோடு சாலையில் விரைவு பேருந்து நிலையம் அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.