districts

img

காணிக்கைமேரி அம்மையார் படத்திறப்பு

பெரம்பலூர், ஜூலை 17 - சிஐடியு பெரம்பலூர் மாவட்டச் செயலா ளர் எஸ்.அகஸ்டினின் தாயார் காணிக்கை மேரி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7.6.2024 அன்று காலமானார்.

அவரது நினைவேந்தல், படத்திறப்பு லால்குடி வட்டம் தாப்பாய் கிராமத்தில் செவ்வாயன்று அவரது இல்லத்தில் நடை பெற்றது. 

சிபிஎம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை  சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை படத்திறப்பு நிகழ்வை துவக்கி வைத்தார்.

சிபிஎம் மாநிலக்குழு ஸ்ரீதர், சாமி.நட ராஜன், திருச்சி மாவட்டச் செயலாளர் ஆர். ராஜா, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்  பி.ரமேஷ், சிஐடியு மாநில துணைத்தலை வர் கருப்பையன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் எஸ்.ரெங்கராஜன், விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் அ.பழநிசாமி, சிஐடியு திருச்சி  புறநகர் மாவட்டச் செயலாளர் கே.சிவராஜன்,  அரியலூர் பி.துரைசாமி, பெரம்பலூர் அ. ரெங்கநாதன், சிபிஎம் பள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் டி.ரஜினிகாந்த், பெரம்பலூர் வட்ட செயலாளர் எம்.பன்னீர் செல்வம், சிபிஎம் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.