பெரம்பலூர், ஜூன் 9- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு வங்கி கூட்டமைப்புகளின் சார்பில் 148 பயனாளிகளுக்கு ரூ.8.64 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் புதனன்று வழங்கினர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, தமிழ்நாடு கிராம வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 8 வங்கிகளின் மூலம் 148 பயனாளிகளுக்கு ரூ.8.64 கோடி மதிப்பி லான கடனுதவிகள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்திற்கு விவசாய உள்கட்ட மைப்பு கடன், விவசாய துணை நடவடிக்கைகளுக்காக கடன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்களுக்கு கடன், கல்வி கடன், வாகன கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு முத்ரா கடன், வீட்டு கடன் போன்ற பல்வேறு கடன்களில் 2020-21ஆம் நிதியாண்டிற்கு ரூ.4,010 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.3,170 கோடி கடன் வழங்கப்பட்டது. 2021-22ஆம் நிதியாண்டிற்கு ரூ.4,120 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் ரூ.3,638 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் நிதி யாண்டிற்கு ரூ.4,267 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 2021-22-ஆம் நிதி யாண்டில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் சிறப்பாக செயல்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய 4 வங்கிகளுக்கு செயல்திறன் விருதுகள் வழங்கப்பட்டன.