districts

img

‘அறிவோம் மார்க்சியம்’ ’ பயிற்சி வகுப்பு துவக்கம்

பெரம்பலூர், ஜன.23- பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டம் சார்  பில் ஜனவரி 21 முதல் ஏப்ரல்  29 வரை வாரந்தோறும் சனிக்  கிழமைகளில் நடைபெறும் ‘அறிவோம் மார்க்சியம்’ தொடர் பயிற்சி வகுப்பு சனிக் கிழமை (ஜன.21) அன்று தொடங்கியது.  சிபிஎம் நகரச் செயலாளர் சிவானந்தம் வரவேற்றார். மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் சி. கருணாகரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.  கவிஞர் அகவி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ், மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர் கள், சிபிஎம் ஒன்றியச் செய லாளர்கள் எம்.கருணாநிதி, செல்லமுத்து உள்பட பலர்  கலந்து கொண்டனர். ஜன வரி 28 அன்று நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் எழுத்தாளரும் மார்க்சிய சிந்தனையாளருமாகிய அன்  வர் உசேன் சிறப்புரையாற்று கிறார்.