districts

img

பெரம்பலூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பங்கேற்பு

பெரம்பலூர், பிப்.23 - பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா பாலக்கரை அருகே உள்ள ஜே. கே.மண்டபத்தில் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலை வகித் தார். திமுக துணை பொதுச் செயலா ளர் ஆ.இராசா எம்.பி., பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் ஆகியோர் பெரம்ப லூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக் குடிக்காடு ஆகிய 4  பேரூராட்சிகளிலும் வெற்றி பெற்றவர்களை பாராட்டி சிறப்புரையாற்றினர்.  பெரம்பலூர் நகராட்சிக்கு அம்பிகா ராஜேந்திரன் தலைவராக, துணை தலைவராக து.ஹரிபாஸ்கர், அரும்பாவூர் பேரூராட்சி தலைவ ராக வள்ளியம்மை ரவிச்சந்திரன், துணை தலைவராக சரண்யா, குரும்ப லூர் பேரூராட்சி தலைவராக சங்கீதா  ரமேஷ், துணை தலைவராக கீதா ரா ஜேந்திரன், பூலாம்பாடி பேரூராட்சி  தலைவராக பாக்கியலட்சுமி செங்குட் டுவன், துணை தலைவராக செல்வ லட்சுமிசேகர், லெப்பைகுடிக்காடு பேரூராட்சிக்கு தலைவராக  ஏ.எம்.ஜாஹிர்உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாராட்டு விழா வில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார். பின்னர் ஆ.ராசா எம்.பி.,  உரையாற்றினார். மாநில நிர்வாகிகள்  பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப் பினர் கா.சொ.க.கண்ணன், கழக  கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.ந.அ.பெருநற்கிள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;