பெரம்பலூர், மே 10 - தமிழ்நாடு அரசு கூட்டுற வுத் துறை ஊழியர் சங்கத் தினர் பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற வலி யுறுத்தி மாநில அளவில் செவ்வாய்க்கிழமை அன்று ஒருநாள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தி லுள்ள கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணி யில் ஈடுபட்டனர். விகிதாச் சார விதிகளை தளர்த்தி, தகுதியுள்ள அனைத்து இளநிலை ஆய்வாளர்களை முதுநிலை ஆய்வாளர்களாக வும், பதிவறை எழுத்தர் அலு வலக உதவியாளர், இர வுக் காவலர் ஆகி யோரை இளநிலை உதவியா ளர்களாகவும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோரை இளநிலை ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்க வேண்டும். 1.5.2022 அன்று வரை கூட்டுறவு சார்பதிவாளர் பதவி உயர்வு பட்டியலை யும், 1.10.2020 வரை துணைப் பதிவாளர் பதவி உயர்வு பட்டியலையும் 31. 5.2022-க்குள் அங்கீகரித்து பணியிடம் வழங்க வேண் டும். கூட்டுறவு சார்பதிவாளர், கள அலுவலர் மற்றும் பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் ஆகியோரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல் இயக்குநராக நியமனம் செய்ய வலியுறுத்தும் பதிவா ளர் சுற்றறிக்கையை கைவிட வேண்டும். போதிய கால அவகாச மின்றி புள்ளி விவரம் கோரு வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய அட்டையு டன் பணியில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் நிறை வேறாதபட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநி லம் முழுவதும் உள்ள மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.