districts

img

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மார்ச் 15 - தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்ததை தொடர்ந்து பெரம்பலூர் நான்கு ரோடு அருகிலுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் டி.எஸ்.சம்பத் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஜி.பஷீர், வட்ட செயலாளர் ஆர்.இராஜகுமாரன், பொருளாளர் எம்.கருணாநிதி, துணைத் தலைவர் பி.முத்துசாமி ஆகியோர் உரையாற்றினர். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் வாழ்த்துரை வழங்கினார்.  பொதுத் துறைகளை தனியார்மயமாக்குவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மின்சாரத் துறையை பொதுத் துறையாகவே நீடித்திட வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டமே தொடர்ந்திட வேண்டும். ஓய்வூதியம் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டும். 2003 ஆம் ஆண்டிற்கு முன்பு பணியேற்று குறைந்த ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. வட்ட துணைத் தலைவர் சி.கண்ணையன் நன்றி கூறினார்.