பெரம்பலூர், மார்ச் 13 - பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் ‘அறிவோம் மார்க்சியம்’ தொடர் பயிற்சி வகுப்பு மார்ச் மாதம் ஞாயிற் றுக்கிழமைகளில் காலை-மதியம் என நடை பெற்று வருகின்றன. தொடர்ச்சியாக மார்ச் 13 அன்று காலை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் திராவிடர் கழக நகரத் தலைவர் அக்ரி.ஆறு முகம் வரவேற்றார். லட்சுமி மருத்துவமனை நிர்வாகி சி.த.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். ‘பெண்ணியமும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் பி.சுகந்தி சிறப்புரை யாற்றினார். அப்போது இந்த சமூகம் ஆதிக்க சமூகம், தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கம், ஒருவரை இன்னொருவர் சுரண்டு கிற சமூகம், பெண் ஜனாதிபதியாக இருந்தா லும், தான் ஒரு பெண் என்ற மனப்பக்குவம் பெண்களுக்கு வந்து விடுகிறது. எனவே அனைத்து சுரண்டல்களும் நீக்கப்பட வேண்டும் என்பதே மார்க்சியம் சொல்லும் பெண்ணியம் என்று பேசினார். மு.பெ.சத்தியநேசன் கலைக்குழுவின ரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பாள் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் த.திவ்யா நன்றி கூறினார். மதியம் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எம்.கருணாநிதி வரவேற்றார். விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் இரா. ஸ்டாலின் தலைமை வகித்தார். சாதியம் - மார்க்சிய அணுகுமுறை என்ற தலைப்பில் தமிழ்நாடு தீ.ஒ.முன்னணி பொதுச் செயலா ளர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.முத்துக்குமார் நன்றி கூறினார். மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் சி.கருணாகரன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், தமுஎகச மாவட்ட செயலாளர் ப.செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சமூக நீதி படைப்பாளர் சங்க மாவட்ட செயலாளர் பா.வசந்தன், அரசுப் பள்ளி முதுகலை தமிழா சிரியர் சி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கினர்.