districts

img

21 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த  சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

பெரம்பலூர், ஏப்.5- தமிழ்நாடு முதலமைச்சர் நீண்ட காலமாக திருக்குட முழுக்கு நடைபெறாத பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்  களுக்கு விரைவில் திருக்குடமுழுக்கு நடைபெறும் என  அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம் சிறு வாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்கு பிறகு புதனன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம், பெரம்ப லூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட அறங்  காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கோயிலின் குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்கு பின்பு ரூ.3 கோடி செலவில் திருப்பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்ற நிலையில், தமிழகத்தில் உள்ள பிரசித்தி  பெற்ற புனித நதிகளான காவேரி, பாலாறு, குண்டாறு,  தாமிரபரணி, வைகை போன்ற அனைத்து நதிகளிலி ருந்தும், கங்கை யமுனை, கோதாவரி போன்ற நதிகளிலி ருந்தும் தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு கலசங்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.