புதுச்சேரி, அக்.18- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை ரூ.5000 ஆயிரம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழி லாளர் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு பிரதேசத் தலைவர் பிரபு ராஜ் தலைமை வகித்தார். பிரதேச துணைத் தலைவர் கே.முருகன், மூத்த தொழிற்சங்க தலைவர் தா. முருகன், பிரதேச செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் ஜீவானந்தம், மணவாளன், விஜயகுமார், செந்தில்குமார், வடிவேல், வீரமணிகண்டன், ஜேவியர் ஆகியோர் பேசினர். பின்னர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்ற கொண்ட முதல்வர், இன்னும் ஒரிரு நாட்களில் அதிகாரிகளை அழைத்து பேசி உதவித்தொகை அறிவிப்பதாக சங்கத்தின் தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.