புதுச்சேரி, டிச. 26- புதுச்சேரியில் சுனாமி ஆழிப் பேரலையில் இறந்தவர்களுக்கு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் திங்களன்று(டிச.26) அனு சரிக்கப்பட்டது. புதுச்சேரி கடற்கரைச் சாலை யிலுள்ள காந்தி சிலை பின்புறம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முத லமைச்சர் ரங்கசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராய ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடலூர் மாவட்டம், சிதம்ப ரம் அருகே கிள்ளை பேரூராட்சிக் குட்பட்ட பிச்சவாரம் சுற்றுலா மையத்தில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, கிரீடு தொண்டு நிறு வன நிறுவன தலைவர் நடன சபாபதி, முன்னாள் அமைச்சர் கலை மணி, முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் தேன்மொழி காத்தவராயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.