districts

பிரதமர் வேட்பாளர் தேர்வில் பிரச்சனை இல்லை: டி.ராஜா கருத்து

புதுச்சேரி, பிப்.28- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் கூட்டம் பிப்ர வரி  25 இல் துவங்கி  4  நாட்கள் புதுச்சேரியில் நடை பெற்றது. பிறகு, தேசிய பொதுச்செயலர் டி. ராஜா, செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- ஒன்றிய பாஜக அரசால் நாட்டின் பன்முகத் தன்மைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை பெருநிறு வனங்களுக்கு சாதகமாக உள்ளது. மக்களுக்கான கல்வி, மருத்துவத்துறைக்கு போதிய  நிதியில்லை. அதானி பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்வி களுக்கு பிரதமர் மோடி பதில் கூறவில்லை. எனவேதான், மக்க ளவைக் கூட்டுக்குழு விசா ரணை தேவை என கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.  கடந்த 1958 ஆம் ஆண்டு முந்த்ரா முறைகேடு புகாரை தொடர்ந்து அப்போதைய நிதியமைச்சர் பதவி விலகினார். ஆனால், தற்போது பிரதமரோ, நிதியமைச்சரோ அதானி பிரச்னைக்கு பொறுப்பேற்க தயாராக இல்லை. பணப்பரிமாற்றம் இடைத்தேர்தலில் மட்டு மல்ல, தேர்தல்களிலும் பண ஆதிக்கம் செலுத்து கிறது. இது இடைத்தேர்த லில் மட்டு மல்ல, பொதுத் தேர்தலிலும் பிரச்சினை யாகிறது. நேர்மையான தேர்தல் நடக்க இந்திய ஜன நாயகத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் அவசி யம். விகிதாச்சார பிரதிநிதித்து வம் தேவை. கார்ப்பரேட் நிறு வனங்களில் பணம் பெற்று ஆதாயம் பெற்றுள்ளது உச்சத்திலுள்ள கட்சி பாஜகதான். அதற்கு அடுத்த இடத்தில் மற்ற கட்சிகள் மிகவும் அடிமட்ட நிலையிலுள்ளன. வரும் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். எங்கள் கட்சிகள் போட்டி யிடும் இடங்களை ஆராய்ந்துள்ளோம். மதச்சார்பற்ற ஜனநாயக அணியை ஒருங்கிணைக்க முயற்சிகள் நடக்கிறது. தலைவர்களை சந்தித்து வருகிறோம். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படுவதே முக்கியம். ஆகவே, மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம். ஒன்றுபட்ட கூட்டணியால்தான் பாஜகவை தோற்கடிக்க முடியும். அதற்காக அனைத்து ஜனநாயகச் சக்திகளையும் அழைக்கி றோம். எதிர்க்கட்சிகள் மாறுபட்டு நிற்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. மதச்சார்பற்ற கூட்டணி யில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் பிரச்சினை இல்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம். ஏற்கனவே அதுபோல பிர தமர் தேர்வு நடந்துள்ளது. அனைவரும் கூட்டாக பிரதமரை தேர்தலுக்கு பிறகு தேர்வு செய்யலாம்.  இவ்வாறு அவர் தெரி வித்தார். தேசியச் செயலர்கள் கே.நாராயணா, சையத் அஷீஸ்பாஷா,  புதுச்சேரி மாநிலச் செயலாளர்அ.மு.சலீம் ஆகியோர் உடனி ருந்தனர்.