districts

img

ஆரோவில்லில் பழங்கால சிலைகள் பறிமுதல்

புதுச்சேரி, செப். 17- புதுச்சேரியை அடுத்துள்ள ஆரோவில்லில் தனியாருக்கு சொந்தமான ஒரு கடையிலிருந்து 7 பழங் கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் கன்னிகா கார்டனில் அமைந் துள்ள மெட்டல் கிராஃப்ட்ஸ் என்ற கைவினைப் பொருட் கள் விற்பனை செய்யும்  கடையில், தமிழகத்தின்  பழங்கால உலோகச்  சிலைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவ தாக கும்பகோணம் சிலை  கடத்தல் தடுப்புப் பிரிவின ருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஜிபி  ஜெயந்த் முரளி தலைமை யில் காவல் துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அர்த்த  நாதீஸ்வரர், சிவகாமி, புத்தர், கிருஷ்ணர், மயில் சிலை உள்ளிட்ட 7 உலோக சிலைகளை பறிமுதல் செய்தனர்.

;