districts

குடிநீர் கேட்டு சாலை மறியல்

புதுச்சேரி, டிச. 26- புதுச்சேரி வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வில்லியனூர் கெம்யூன் பஞ்சாயத்திடம் பலமுறை முறையிட்டும் நட வடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் விநியோகம் செய்யப் படாததால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் திங்கட்கிழமை காலை ஒன்று திரண்டு வில்லியனூர் - செல்லிப்பட்டு சாலையில் மரக்கட்டைகளை போட்டு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், சம்பந்தப்பட்ட கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் வந்து பிரச்சினைக்கு தீர்வு கண்ட பின்னரே மறியலை கைவிடுவே?ம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அங்கு வந்து, உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.