புதுச்சேரி, மார்ச் 31- மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 9ஆம் தேதி துவங்கியது. இறுதி நாளான வெள்ளியன்று (மார்ச் 31) திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், நேரு (சுயேட்சை) ஆகியோர் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தும் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தை வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் சிவா பேசுகை யில், “36 ஆண்டுகளில் 13 முறை மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதனை ஒன்றிய அரசு நிராகரித்தது. மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசு உள்ளது. மக்கள் பிரதி நிதிகளான முதல்வர், அமைச்சர்கள் முடிவு எடுக்க முடியாமல் தலை மைச் செயலாளர், ஆளுநர் முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது” என்றார். ஒன்றிய அரசின் நிதிதான் புதுச்சேரி நிர்வாகத்தை நடத்துகிறது. பெரும்பாலான கோப்புகள் துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப் படுவதால் அதிகாரம் குறைந்துள்ளது. எனவே இதை அரசு தீர்மானமாக கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார். இந்த தீர்மானத்தை ஆதரித்து திமுக, காங்கிரஸ், பாஜக, சுயேட்சை உறுப்பினர்கள் பேசினர். அதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்றுவோம்” என்றார். இதையடுத்து, இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. உறுப்பி னர்கள் அனைவரும் வரவேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர், “தில்லி சென்று பிரதமரை சந்தித்து இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்து பெறுவோம்” என்றார். அதனை தொடர்ந்து தனிநபர் கொண்டு வந்த தீர்மானம் திரும்பப் பெறப்பட்டு அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
திருக்குறல் தேசிய நூல்
அதேபோல் உறுப்பினர் அனிபால் கென்னடி (திமுக) திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி தனிநபர் தீர்மானம் கொண்டுவந்தார். அத்தீர்மானமும் அரசு தீர்மானமாக ஏற்று கொண்டு நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு
மார்ச் 19 முதல் 17 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரை காலவரையின்றி பேரவைத் தலைவர் செல்வம் ஒத்திவைத்தார்.