புதுச்சேரி, ஜூன் 29- பொதுப்பணித்துறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:-
நீட் தேர்வை எதிர்த்து நாடு முழுவதும் பலகட்ட போராட்டம் நடை பெற்று வருகிறது. ஊழலுக்கு வழி வகுக்கக்கூடிய இத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள வையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மாணவர்களை பாதிக்கக்கூடிய நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ஒன்றிய பாஜக மோடி அரசு தயங்கி வருவது கண்டனத்திற்குரியது என்றார்.
புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறை கமிசன் துறையாக மாறி உள்ளது. ஒப்பந்ததாரர்கள் 30 விழுக்காடு கமிசன் தொகையை ஆட்சியாளர்களுக்கு வழங்கப்படு வதாக புகார்கள் வந்துள்ளது.மேலும் பொதுப்பணித்துறையின் பணிகள் ஆங்காங்கே கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை பணிகள் நடைபெற்றாலும் , கழிவுநீர் வாய்க்கால் முறையாக அமைக்கப்படுவதில்லை. சாலை அமைத்த உடனே பள்ளம் தோண்டுவதாக பொது மக்களிட மிருந்து புகார்கள் வருகிறது.
அமைச்சர் ராஜினாமா
புதுச்சேரி வனத்துறை அமைச்சராக உள்ள தேனி. ஜெயக்குமாரின் மக்களுக்கு சொந்தமான இடத்தில் சந்தன மரக்கட்டையில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை மீதான முறைகேடு விவகாரத்தில், அமைச்சர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல் உள்துறை அமைச்சராக உள்ள நமச்சி வாயம் தொடர்ந்து தனது சொந்த காரணங்களுக்காக வெளிநாடு பய ணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு சென்றுள்ளார். எனவே அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். ஒன்றிய அரசின் வெளி யுறவுத்துறை, உள்துறை அமைச்ச கத்திற்கே தெரியாமல் இது போன்ற பயணங்களை மேற்கொண்டு வரு கிறார். அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பு வகிக்கும் உள்துறை, மின்துறை, கல்வித்துறை ஆகிய பணிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
கேரளம், தமிழ்நாடு போன்ற அண்டை மாநிலங்களில் ரேசன் கடை களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்கள் வழங்குவதைப் போல் புதுச்சேரியில் ரேசன் கடை களை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். மக்க ளுக்கு தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ரங்கசாமி நிறைவேற்ற வேண்டும் என்றார் நாராயணசாமி.