பாலியல்வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு நிவாரணம் வழங்கியது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சேர்ந்த சிறுமி ஆர்த்தி கடந்த மார்ச் மாதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் நிவாரணத் தொகையிலிருந்து ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை சிறுமியின் தாய், தந்தையிடம் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் வெள்ளியன்று வழங்கினார். இந்நிகழ்வின் போது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் உடன் இருந்தார்.